தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

புத்தாண்டு மினி பலன்கள்..நவகோட்களும் நாளும் சஞ்சாரம் செய்யுமே.. 
இனிய புத்தாண்டு 2016.. துவக்கமே கோலாகலமாக அமையட்டும்..ஆம்.
மேஷ ராசிக்கரார்களுக்கு  வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா..

பண வரவுகள் சிறப்பு உண்டு.. பணியில் உற்சாகம் ஏற்படும். எது தந்தாலும் சமாளிப்போம் என்ற எண்ணம் 2015 ல் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் மிகப்பெரிய அஸ்திவாரம்.
குறிப்பு உடல் ஆரோக்கியம்...
வயது 10க்குள் பாதகமில்லை
வயது 20க்குள் சிறிதாய் தலைவலி..
வயது 30க்குள் மகளிரானால் கவனம்.. சிறந்த ஓய்வு ஒன்றே தாய்மை சிறப்பாகும். ஆ்டவரெனில் குதிங்கால் வலி மற்றும் வயிற்று உபத்திரவம்.
வயது 40க்கு மேல் நோயின்றி இருப்பினும் மனதால் அச்சம்.. முதுகின் அடிப்பகுதியில் வலி உபாதை... தருவது யார்.. விருச்சிக சனி எட்டாமிடத்தில் உள்ளதால்.. கவலைப்படத் தேவையில்லை.. நிச்சயம் குணமாகும்.. பிரார்த்தனை மிகச் சிறந்த நிவாரணம்

ரிசப ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள்.. பலன் அறிவோமா...

ஆகஸ்ட் முதல் மிக நல்ல மகிழ்வான ஆரம்பம். குடும்பத்தில் குதூகலம்.. கணவன் மனைவி உறவில் குறை எதுவெனினும் மாறி நிறைவாய் மகிழ்ச்சி பெற்றிடலாம்.  ஆபரணம் வாங்குதல் பூமி மனை வாங்குதல் உண்டு.  ஆரோ்ககியம் நன்றாக இருக்கும். மருத்துவ மனை பக்கம் சென்றால் அங்குள்ள நோயாளி உறவினர்களுக்கு உதவி செய்யலாம். உங்களது இம்முன்னேற்றம் முதலில் அதாவது ஜூலை வரை எதிர்ப்பார்ப்பதில் பலனில்லை.
எனவே ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களும் அதிகாலைத் துயிலெழுத்து, இறையருளைப் பெற்றிட ஆலயம் தொழுதல் நன்று

மிதுன ராசிக்காரர்களுக்கு  வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா!

அனைத்திலும் ஓகே.. பணவரவு, கணவன் மனைவி உறவு, உறவினர்களின் பாராட்டு எனப் பலப்பல மகிழ்வுகளுககு மத்தியில், ஆகஸ்ட் 2 க்கு முன்பாக குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், படிப்பிற்கு தமது ஆலோசனைகள் கேட்காமல் உதாசீனப்படுத்துகின்றனரே என்ற ஓரே கவலை கொள்ளும் அளவிற்கு உரையாட்ல்கள் குழந்தைகளிடம் அமையும்.  இக்கால பெற்றோர் களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. குழந்தைகள் எவ்வழி அவ்வழி நம் வழி என்றாக்குவது போல் சிறிது தூரம் சென்று நம் வழிக்கு அவர்களை அழைத்திடுக.. அப்போது புரியும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரின் மகிமை..
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு குரு மற்றும் சனி வழிபாடு அவசியம்.

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா...

நன்மை பாதி.. கெடுதல் பாதி என்பார்களே.. அது உங்களுக்கு.. 2016 ல் குரு இரண்டாமிடத்தில் ஆகஸ்ட் வரை பலன்கள் ஓரளவுக்குத் தரத்தான் செய்யும்.  அதே நேரம் அரசியலில் உள்ள பலருக்கு இது இருக்கமான மனநிலை தந்தாலும் எதிர்காலம் நம்பும் படியாக முன்னேற்றங்களும் வரும்.  குருப் பெயர்ச்சிக்குப் பின் பயம், பதட்டம் சோர்வு தவிக்கும் நிலைகள் ஆகியவை தவிர்த்திட திடமனது கொள்ளும் முயற்சியில் இறங்கிடுக.  மனோதிடமும் முகமலர்ச்சியும் நமதாகில் நம்மை எவர் வெல்வர்.
ஆரோக்கியம் குறையும்.. சரியாகும்.  வயது 50க்கு மேல் உள்ளவர்கள் சிறுநீரக மற்றும் மூல நோய்கள் பயம் உள்ளவர்கள் உரிய மருத்துவம் செய்து கொள்வது நல்லது,
வருமுன் காத்திடும் குணம் பெற்றிடுக..

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.  பலன் அறிவோமா..

துணிந்து போராடும் நேரமிது,  சனி 4மிடத்தில் அர்த்தாஷ்டசனி என்றாகிறதல்லவா.. ஜென்மராசியில் குரு யாரைத் தூங்கவிட்டது.  தொழிலில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்தலும்,  நமக்கே உரியர்கள் சற்று தொந்தரவு தருவதுமாக ஆகஸ்ட் வரை இருந்து பின்னர் நம்மைக் கேட்டு நன்மை பெற்றவர் மனம் திறந்த பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.  ஒரு குறிப்பு.. சோகம் பல வந்தாலும், நேசம் நட்பு பாசம் என்ற பந்தத்தில் அனைவரையு்ம் ஒன்று சேர்க்கும் முக்கியத்துவமும் இந்த ஆண்டிற்கு உண்டு.
தனக்கென்று இத்திறன் இருந்ததே இம்மேன்மைக்குக் காரணம் என்று சொல்லிக் கொள்ளும் படியான தனித் திறனை வெளிப்படுத்தும் நேரமிது.
ஆரோக்கியம் உடலுக்கு பாதிப்பில்லை.  மனச் சோர்வுக்கு உரமூட்ட பிரார்த்தனைகள் வேண்டும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள்.  பலன் அறிவோமா..

தன் குழந்தைகளின் முன்னேற்றமே தனக்கு முக்கியம் என்று சொல்லி வந்த அனைத்து கன்னி ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாகும்.  ஆனால் அவர்களைப் பொறுத்தவரை நார்மலான நேரம்.  ராசியில் வருகின்ற குரு பகவான் நன்மைகள் தரத் தயக்கம் காட்டுவார். ஆனால் அனுபங்களை அள்ளி வழங்குவார்.  எங்கோ ஒரு மூலையிலிருந்து வருகின்ற தகவல் கூட குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பைத் தந்திடும்...
தொழில் சொந்தமாக செய்வபவர்கள் வரும் ஆகஸ்ட்க்கு மேலாக பலன்கள் இரட்டிப்பாகும். அதே நேரம் கூட்டாளிகளுடனும் சமூகமான முன்னேற்றம் கிடைக்கும். புது தொழில் மற்றும் யுக்திகள் வந்து சேரும்.
ஆரோக்கியம்... உடலில் ஒன்றுமில்லை. மனதில் ஒன்றுமில்லை.. எல்லாம் சுகமே... பின் என்ன.. அந்த ஒன்று தானே.. ஆமாம்,. பேச்சுகளில் சரவ கவனமாக இருப்பது... இவ்வாண்டு நாம் ஒன்றை யதார்த்தமாக சொல்ல அது மற்றவர்கள் காதில் வேறுவிதமாக போய் சேர வந்தது வினை என்றாகி விடக்கூடாதே... தினமும் ஹயக்கீரிவர் மற்றும் சரஸ்வதி ஸ்லோகம் பாராயணம் முக்கியம்.

துலாம் ராசிக்காரார்களுக்கு வாழ்த்துக்கள். பலன் அறிவோமா..

ஜூலை 2016 வரை யோகம்.  பின்னர்... அதை ஏன் இப்போதே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்.  ஏழரைச் சனியில் கடைசி பகுதி.. குரு மறைவு.. ராகு வேறு லாபஸ்தானத்தை பிடித்துக் கொள்வது...ஆக மொத்தம் ஆகஸ்ட் 2016 முதல் ஒரு ஐந்து மாத காலம் எதிர் நீச்சல் தான்.
வயது வித்தியாசமின்றி, ஆகஸ்ட் முதல் ஐந்தாறு மாத காலத்திற்கு, சர்வ ரோக நிவாரணி ஏதேனும், பயன்படுத்திவர உத்தமம்.  சித்த வைத்திய முறையில் சொன்னால் கடுக்காய் உள் விதையை எடுத்து விட்டு, மற்றதை உரியமுறையில் மருந்தாக்கி அருந்திவரலாம்.
வீட்டில் சுக்கு மிளகு திப்பில் இந்துப்பு காயம் சீரகம் கருஞ்சீரகம் என்ற அஷ்ட சூரணம் உரிய முறையில் தயாரித்து வைத்து பயன்படுத்திட சிறப்பு.
குறிப்பு உங்களுக்கு இது பற்றி இலவசமாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் சென்னை கே.கே.நகரில் உள்ள சித்த மருத்துவரை Dr. R. Uthayaganga Hari BSMS., MD.,(S) Peadiatric..  (குழந்தைத் திறன் வளர்ப்பு நிபுணர்)அணுகலாமே.. கைபேசி.. 9486786300



தொடரும்...
வரும் ஞாயிற்றுக்கிழமை..
விருச்சிக ராசிக்காரர்களுக்கு,
இந்த புத்தாண்டு முக்கியமாக தொழிலைப் ப்ற்றி குறிப்பிட வேண்டும்.  எந்தத் தொழிலில் இருந்தாலும், ஒரு சிறு அபகீர்த்தி - அதாவது தொழிலில் நாட்டமில்லை என்று குறையை வைத்து, செய்கின்ற தொழிலில் உள்ள பக்தியைக் குறைத்து விடுவார்கள். இது நல்லதா என்றால் நல்லது என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.  ஏனெனில் கடந்த வருட உழைப்பு, இந்த ஆண்டு பாராட்டப்பட வேண்டிய நிலையில் இந்த பின்னடைவு உள்ளதே என்று கவலைப்பட்ட பின்பு ஆகஸ்ட் 3ம் நாள் முதல் அழைத்து, புகழப்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை.  அதே போல் விருச்சிக ராசியில் பிறந்தால் திருமணமே இல்லையே என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, சராசரி திருமண வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் கதவைத் தட்டி திருமண யோகத்தைத்தரும் என்பதில் மாற்றமில்லை
குறிப்பு.. இடது கால் வலி, கழுத்துப் பகுதி வலி, சிறிதாக தலைவலி என்பதெல்லாம் ஜென்மச் சனியின் குற்றம்... வழிபாடு மற்றும் தியானப் பிரார்த்தனைகள் நல்ல பலன் தரும்.
தொழிலதிபர்கள் ஒரு ஆறு மாத காலத்திற்கு, தொழிலில் பின்தங்கியுள்ளவர்களை அழைத்து, ஓய்வு கொடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் திரும்ப அழைத்துக் கொள்ளும் படியான நிலைமை வரும்.   அதற்காக சோர்வடைய வேண்டாம்.  விசுவாசமுள்ள தொழிலார்கள் தக்க மாற்றங்களைக் கடைபிடித்து உதவுவார்கள் என்பதில் கொஞ்சம் தைரியம் கொள்ளலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு,
2016 ஆரம்பமே கோலாகலம் தான் என்று திருப்தி அடைந்து விடுவீர்கள்... எனினும் 30 வயதிற்குக் குறைாக உள்ளவர்களின் நிலை சற்று சிரமம்.  வேலை கிடைக்கும்.  திருப்தியாக இருக்கும். வீட்டாரின் புகழ் அண்டை அயலாரின் பாராட்டு எல்லாம் கிடைத்துவிடும்.  ஆனால் நம்மை போற்ற வேண்டிய மிக நெருக்கத்தில் உள்ளவர்கள் ந்ம்மை ஏளனம் செய்து பரிகசிப்பார்கள்.. ஏன்.. ஏழரைச் சனி மட்டுமில்லாது. அதிசார குரு பத்தாமிடத்தில் உள்ளதால் தான்.  சொத்து வாங்குதல் பழையதை விற்றல் என்பதில் உள்ளுரில் பிரச்சனையில்லை. தொலைவில் மற்றும் வெளிநாடுகளில் சொத்து வாங்குதல் விற்றலில் சற்று கவனம் தேவை.  பெண்கள் தம் வீட்டின் மூத்த குழந்தைகளின் மேல் சற்று அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.  தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பாக பணியில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது.
குறிப்பு ஆரோக்கியம் சிறு குழந்களுக்கு, மத்திய வயதை உடையவர்களுக்கும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து மறையும்.  நேர்மறையாக எண்ணங்கள் உயர்வு காணலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு,
தூக்கம் என்பது தன்மை உற்சாகப்படுத்தி அடுத்த நாளுக்கு உரிய சக்தியை ஈட்டத்தான் என்பதைநன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வரும் சூலை மாதம் வரை தூக்கம் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் கூட இல்லையே என சற்று அங்கலாய்க்க வேண்டியது வரும்.  ஆகஸ்ட்லிருந்து, எதற்கும் தலையாட்டி வைக்கலாம்.  வருபவர் எல்லாம் தங்களுக்கு நன்மை செய்யவே வருவார்கள்.  எல்லா வழிகளிலும் மேன்மை கிடைக்கும் இந்த 2016ஐ பொறுமையாக காத்திருந்து ஆகஸ்ட் முதல் மலர்ந்த முகத்தோடு, மகிழ்வான வாழ்க்கைக்கு வித்திடலாம்.
குறிப்பு  மன ரீதியில் டென்சன், பணிப்பளுவின் காரணமாக நிம்மதியின்மை, மன நல பிரச்சனைகள் சூலை வரை அதிகரித்து பின்னர் சரியாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு
ராகு கேது பெயர்ச்சி இந்த மாதம் அதாவது துவக்கத்தில் ஜனவரி மாதத்திலேயே உள்ளது.  கணவன் மனைவியரிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் இருந்திடினும், அதனை அதிகாலை வேளையில் மாதம் நான்கு முறை அமர்ந்து, ஒரு தீர்மானத்தை எடுத்து அதன்படி இருவரும் கட்டுப்பாடுடன் கடைபிடிக்க வேண்டிய வருடம்.  வயிறு வலி என்று சொல்லும் படியாக வந்து மறையும்.  உணவைச் சாப்பிடும் நேரத்தில் தொந்தரவுகள் வந்து, ஜீரண சக்தியை முழுவதும் மாற்றிவிடும்.  சூலை மாதத்திற்குள் சுப காரியங்கள் உண்டு.
குறிபபு  பிள்ளையார் முருகன் துர்க்கா வழிபாடு தேவை.  முதுகு வலி மற்றும் இடது கை வலிகள் இருப்பின் உரிய நிவாரணம் தேடிக் கொள்வது நல்லது.

மீன ராசிக்காரர்க்கு,

வீடு, மனை,வாகனம், வீடடில் அத்தியாவசியப் பொருட்கள்வாங்க கடன் வாங்கலாம்.  ஆகஸ்ட்டில் அத்தனை கடனும் சரியாகும்.  உங்களுக்கு நன்மை செய்ய வேண்டிய பொறுப்புக்களை உள்ளவர்களை ஆகஸ்ட் முதல் மாதம் ஒரு முறையாகச் சந்தித்து உங்கள் முறையீடுகளைத் தக்க முறையில் சமர்ப்பித்தால், ஒருஆறு மாதத்திற்கு ஆறு முறை உயர்வை சந்திக்கலாம்.  மீனராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சி முறையே 6லும் 12ம் வருவதால், இன்னல்கள் என்பதில் மிகக் குறைவாகவே வரும்.  ஆனால் குரு பகவான் 7மிடத்தில் வரும் போது வந்த போதும் உங்களை இந்த உலகத்திற்கு நல்ல விதமான வழிகாட்டுதல்களுடன் முன்னேற்றமே தந்திடும். இந்த 2016ல் தாங்கள் எண்ணி எண்ணங்கள் நிறைவேறும்.  சுபம்.
  

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை