தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

புரட்டாசி அமாவாசை
நல்ல தருணம் எது! நம் வாழ்க்கை சிறக்க கைக்கொள்ளும் மேன்மையான காரியம் எது! நமக்கு எத்தனை முறை சொல்வதனாலும் – அப்படி சொல்லிக் கொடுத்த பெற்றோர்களுக்கே நாம் உணவளிக்க தக்க வாய்ப்பாம் அமாவாசை திதி நாளாகும். அதுவும் புரட்டாசி மாதம் வரும் திதி மகாளய அமாவாசை நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்..

பித்ரு லோகம் – பூமியில் அவதரித்து, ஆயுள் முடிந்து மேலுலகம் செல்வதாக சொல்வோமே.. அந்த பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் நம்மைக் காண வருகின்ற (அந்த 15 தினங்கள் அதாவது புரட்டாசி மாதம் பௌவுர்ணமி தொடங்கி 15 தினங்கள் அமாவாசை வரை மஹாளய பட்சமெனும் நாட்களில்), பெற்றோர்கள் இல்லம் நாடி வந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்தவும், அவர்கள் மகிழ்ச்சியுறவும் தக்க தருணம் தான் அக்காலம்.  எனவே நம்மை நாடி வரும் பெற்றோரை சிறப்பாக உபசரிக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.  எனவே நாம் தானம் செய்வதும், எள்ளும் தண்ணீரும் கலந்த தர்ப்பணம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.  இதனால் திருப்தியடைந்து பெற்றோர் நமக்கு அருளாசி வழங்குவார்கள். நோயற்ற வாழ்க்கையும், வளங்கள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையும் அவர்களின் ஆசியினாலாயே தான் நமக்கு வழங்க முடியும். குறிப்பாக வருடந்தோறும் தாய் தந்தையர் இறந்த பகுள, சுத்த மாத திதிநாளில் சிரார்த்தம் கொடுக்க இயலாவிட்டாலும் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்து மகிழ்வுற வேண்டும்.  இவ்வாண்டு சனிக்கிழமை அமாவாசை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு அமைந்துள்ளது.  ஏழை மக்களுக்கு உதவிட்டால் சனி பகவானின் அருட்காட்சம் அளவிலாமால் நாம் கிடைக்கப பெறுவோம். முன்னோர்களுக்கு படையல் – அதாவது சைவ உணவுகளை ஆக்கிப் படைத்து மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோமாக. 

பாண்டிச்சேரி ராயல் பார்க் -கில் 27-08-2019 அன்று நடைபெற்ற வண்ண மய விழாவில்..
குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் தேர்வு செய்தவாறு, பாளையங்கோட்டை ஜோதிடத் தம்பதி நாராயணய்யர் ரெங்கன் உஷா ரெங்கன் தம்பதியர்க்கு சிகரம் தொட்ட ஜோதிடதம்பதி“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  திரு கே.சாமிதுரை, திரு மோகன்தாஸ் ஜெர்மனி கவுன்சில் அட்வைசர் திரு ஜான் பீட்டர் ஒஸ்போர்ன், டாக்டர் ராயல் பிரசன்ட், 













திரைத்துறையிலிருந்து, பாகுபலிபுகழ் திருமதி ரம்யாகிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன், டாக்டர் சின்னி ஜெயந்த், டைரக்டர் சுந்தர்ராஜன், பிலிம் ஆக்டர் டாக்டர் அருள்மணி குளோபல் சேர்மன் திரு செல்வன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடத் தம்பதியைப் பாராட்டினர். 

பாளையங்கோட்டையிலிருந்து கொண்டே பன்னாட்டு வாடிக்கையாளர் களுடன் கடந்த 40 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் தம்பதியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியிலில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்று பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருவதுடன், முப்பதாண்டுகாலம் தமிழாசியராகவும், ஜூனியர் ரெட்கிராஸ் கவுன்சிலின் மாநில கருத்தாளர் பயிற்சியுடன், நுகர்வோர் மன்ற விருதுகள் பலவும் பெற்றதும் குறிப்பிடத்க்கது.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை