தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

சான்றோர்க்கு வணக்கங்கள் 

இளையோர் அனைவருக்கும் நல்லாசிகள் 

காலம் நம்மை கடந்து கொண்டே செல்கிறது அல்லவா...

எண்ணிய செயல் யாவும் எண்ணிய படி நிறைவேற எவ்வளவு அருகதை உள்ளது என்பது உள்ளமே அறிந்தால் திட்டமிட்டு செயல்படலாம் அல்லவா..

எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதில் முதன்மையானது நம்முடைய நம்பிக்கையும் எண்ணங்களும் ஆகும் 

அந்த நம்பிக்கை எதன் அடிப்படையில் உதாரணமாக ஒரு விதை விதைத்து விட்டால் அதை செடியாகி மரமாகும் வரை பருவம் பார்க்க வேண்டும் அல்லவா அதுபோல நம்முடைய நம்பிக்கையை எண்ணங்களை சரியான முறையில் திசை கா



ட்டும் கருவியில் குறிப்பிடும் திசைகளில் ஊர்திகள் செல்வது போல் நம் ஒவ்வொருவரின் பிறந்த நேரம் அடிப்படையில் உள்ள சுய ஜாதகங்களும் அவரவர் கைரேகைகளும் சரியான கலங்கரை விளக்கமாகவும் திசைகாட்டும் கருவியாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே..

இதோ ஜோதிட வடிவில் எதிர்காலம் அறிய அடிப்படையில் தேவையான விஷயங்களை தொடர்ந்து நாம் கவனிப்போம்..

ஜோதிட தம்பதி ரங்கன் உஷா 

ஜோதிட பாடம் - 01



1. வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாஸரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3)


இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.


வருடங்கள் மொத்தம் அறுபது அவை:


1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.


அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:


1.உத்தராயணம்

(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்

(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.


ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:


1.வஸந்தருது

(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது

(ஆனி,ஆடி)

3.வர்ஷருது

(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது

(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது

(மார்கழி,தை)

6.சிசிரருது

(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.


தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :


1.சித்திரை(மேஷம்)

2.வைகாசி(ரிஷபம்)

3.ஆனி(மிதுனம்)

4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)

6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)

8.கார்த்திகை(விருச்சிகம்)

9.மார்கழி(தனுர்)

10.தை(மகரம்)

11.மாசி(கும்பம்)

12.பங்குனி(மீனம்).


பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :


1.ஸுக்ல பக்ஷம்

(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2.க்ருஷ்ணபக்ஷம்

(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.


திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :


1.பிரதமை

2.துதியை

3.திருதியை

4.சதுர்த்தி

5.பஞ்சமி

6.ஷஷ்டி

7.சப்தமி

8.அஷ்டமி

9.நவமி

10.தசமி

11.ஏகாதசி

12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.


வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :


1.ஆதித்யவாஸரம்

2.சோமவாஸரம்

3.மங்களவாஸரம்

4.ஸெளமியவாஸரம்

5.குருவாஸரம்

6.சுக்ரவாஸரம்

7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்


நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:


1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.


கிரகங்கள் ஒன்பது ஆகும்:


1.சூரியன்(SUN)

2.சந்திரன்(MOON)

3.அங்காரகன்(MARS)

4.புதன்(MERCURY)

5.குரு(JUPITER)

6.சுக்ரன்(VENUS)

7.சனி(SATURN)

8.இராகு(ASCENDING NODE)

9.கேது(DESCENDING NODE)


இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:


இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.


அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼

மேஷம்

செவ்வாய்


கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2

ரிஷபம்

சுக்கிரன்


மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன

ர்பூசம்முன்3/4

மிதுனம்

புதன்


புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்

கடகம்

சந்திரன்


மகம்,பூரம்,உத்திரம் முன் ¼

சிம்மம்

சூரியன்


உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2

கன்னி

புதன்


சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4

துலாம்

சுக்கிரன்


விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை

விருச்சிகம்

செவ்வாய்


மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4

தனுசு

குரு


உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2

மகரம்

சனி


அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4

கும்பம்

சனி


பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி

மீனம்

குரு


சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.


சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி


பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.

பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.

இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.


செவ்வாய் :சுப்ரமண்யர்


ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.

வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.


புதன் :விஷ்ணு


ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.


குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)


ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.


சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்


ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.


சனி : எமன், சாஸ்தா


உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).


ராகு: காளி, துர்கை


கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.


கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்


ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).


உடலுக்கு ஒன்பது வாசல் :


மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன


1,சூரியன்-இடக்கண்

2,சுக்கிரன்-வலக்கண்வாசல்

3,சந்திரன்-வாய் வாசல்

4,புதன்-இடமூக்கு வாசல்

5,செவ்வாய்-வலமூக்கு வாசல்

6,வியாழன்-வலக் காதுவாசல்

7,சனி-இடக்காது வாசல்

8,இராகு-மலவாசல்

9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்


இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!


நவரத்தினங்கள்:


1.கோமேதகம்

2.நீலம்

3.பவளம்

4.புஷ்பராகம்

5.மரகதம்

6.மாணிக்கம்

7.முத்து

8.வைடூரியம்

9.வைரம்.


பூதங்கள் ஐந்து வகைப்படும் :


1.ஆகாயம்-வானம்

சப்தம்

ஓசை

2.வாயு-காற்று

ஸ்பர்ஷம்

தொடு உணர்வு

3.அக்னி-நெருப்பு(தீ)

ரூபம்

ஒளி(பார்த்தல்)

4.ஜலம்-நீர்

ரஸம்

சுவை

5.பிருத்வி-நிலம்

கந்தம்

நாற்றம்(மணம்)


மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :


1.கொலை

2.பொய்

3.களவு

4.கள் அருந்துதல்

5.குரு நிந்தை.


வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:


1.புகழ்

2.கல்வி

3.வலிமை

4.வெற்றி

5.நன்மக்கள்

6.பொன்

7.நெல்

8.நல்ஊழ்

9.நுகர்ச்சி

10.அறிவு

11.அழகு

12.பொறுமை

13.இளமை

14.துனிவு

15.நோயின்மை

16.வாழ்நாள்..


புராணங்கள் பதினெட்டு வகைபடும்,


1.பிரம்ம புராணம்

2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்

5.விஷ்ணு புராணம்

6.கருட புராணம்

7.அக்னி புராணம்

8.மத்ஸ்ய புராணம்

9.நாரத புராணம்

10.வராக புராணம்

11.வாமன புராணம்

12.கூர்ம புராணம்

13.பாகவத புராணம்

14.ஸ்கந்த புராணம்

15.சிவ புராணம் 

16.மார்க்கண்டேய புராணம் 

17.பிரம்மாண்ட புராணம் 

18.பவிஷ்ய புராணம்.


இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:


1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.🙏

பூவையும் நாரையும் ஒன்றாக இணைத்து பல பல வடிவங்களில் கண்கவர் பூமாலையாக தொடுத்து சுவாமிக்கு அணிவித்து அதனால் மகிழ்ந்து இறை அருளை பெறுவது போல

அற்புதமான பிதுருஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தாமான ஒன்பதாம் இடம்  பற்றியும் அந்த இடத்தில் நன்மை தருவதற்கு பதிலாக தீமை தரும் அமைப்பு இருந்தால் அதனை வெல்லும் ரகசியத்தையும் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

 *வெரி கிரேட் ஸ்மால் சல்யூட்*...

 எல்லோரும் தெரிந்து 

 வேண்டிய 

*குதப காலம்* பற்றிய 

அரிய ஜோதிட ரகசியம்!

ஜனன ஜாதகத்தில் பித்ருஸ்தானம்,தந்தை-

அதிர்ஷ்டம், பொன், பொருள், என்பதற்கான 

9 ம் பாவகத்தை எப்படி 

நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வது?

ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் என்னவென்றால், 

அவன் முற்பிறவியிலே செய்த "பாவமும், புண்ணியமும்" ஆகும். 

அவனின் பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். 

அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர்.

ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே 

செய்து விடுகிறார்கள். 

ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். 

ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே 

செய்து விடுகிறார்கள். 

வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. 

இது ஏன்....? இதற்க்கு "பிறந்த நேரம்தான்" காரணமா..?

நடைமுறையிலே 

சிலர் பேச நாம் கேட்டிருக்கின்றோம். 

அவருக்கென்ன குறை? அவர்பிறந்த நேரம். 

அவர் ராஜாவைப் 

போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பலவித நன்மைகளை அடைகிறார், 

அவர் நினைத்ததை சாதித்து விடுகிறார். 

ஜனன ஜாதகத்திலே லக்னம் என்று குறிப்பிடபட்டுள்ள ராசியிலிருந்து எண்ணிவரும் 9வது

இடம்தான்(ராசிதான்) 

"உயர்வானதை அடைவது" அதாவது நாம் இந்த உலகத்திற்கு பிறந்து

வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதியை காட்டும் இடமாகும். 

ஒருவரது ஜாதகத்தில் இந்த 9வது இடம்

நல்ல அமைப்புடன் இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார், எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஒன்பதாவது இடத்திலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார், போராடுகிறார், 

அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். 

இதுதான் "ஜோதிட ரகசியம்" 

இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

அதாவது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், "குதபகாலம்" என்று கூறுவார்கள்.

குதப காலம் என்றால் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோமா?

ஒரு நாளின் பகல் பொழுதை பதினைந்து பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். 

அதாவது, காலை சூர்யோதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரையுள்ள பன்னிரண்டு மணி நேரத்தை பதினைந்து பகுதிகளாக, அதாவது தலா நாற்பத்து எட்டு நிமிஷங்கள் வீதம் (48×15= 720 நிமிஷங்கள்) பிரித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பிரிக்கப்பட்ட பதினைந்து பகுதிகளுக்குள் 

எட்டாவது பகுதிக்கு 

குதப காலம் எனப் பெயர். 

அதாவது, காலை சரியாக ஆறு மணிக்கு சூர்யோதயமும் மாலை சரியாக ஆறு மணிக்கு சூர்யாஸ்தமனமும் நிகழ்வதாக வைத்துக் கொண்டால், 

எட்டாவது பகுதியின் 

48 நிமிஷங்களான 336 முதல் 384ஆவது நிமிஷம் வரையுள்ள, அதாவது மதியம் 11.36 மணி முதல் 12.24 மணி வரையுள்ள நேரத்துக்கு குதப காலம் எனப்பெயர்,

இந்த குதப கால  நேரத்தில்தான் "பித்ருக்கள்" நாம் படைக்கும் "அமாவாசை பிண்டத்தை" ஏற்க தயாராக இருக்கிறார்கள்

அதாவது இந்த குதப காலத்தில் (நேரத்தில்) செய்யப்படும் செயல்கள் அனைத்தும், மறைந்த முன்னோர்களுக்கு. பித்ருக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் நேரமாகும்.

ஆகவேதான், நமது சாஸ்திரங்கள் 

அமாவாசை போன்ற நாட்களில் செய்யப்படும் (பித்ரு) தர்ப்பணத்தையும் வருஷா வருஷம் பெற்றோருக்குச் செய்யும் சிராத்தத்தையும் (திதியையும்),அமாவாசைதர்ப்பண நாள் அன்று அல்லது வருஷா வருஷம் முன்னோர்களுக்கு செய்யும் சிரார்த்த நாளன்று காலை முதல் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, 

குதபகால நேரத்தில் காலை 11.36 மணி வந்தவுடன் பித்ரு தர்ப்பண/சிரார்த்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும், இதனால் முன்னோர்களின் 

அருளும் புண்ணியமும் அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்றும் கூறுகின்றன.

இந்த குதப் கால 

நேரத்தில் நமது முன்னோர்கள் 

தர்ப்பணம்/சிரார்த்தம் நடக்கும் இடத்திற்கு  காற்று வடிவில் வந்து

தர்ப்பணம்/சிரார்த்தம் செய்யும் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு தர்ப்பணத்தில்/சிரார்த்தத்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் !!

இந்த குதப கால நேரத்திலே, உங்கள் ஊரில் உள்ள "அரச மரங்களைச்" சுற்றி வாருங்கள்.


ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 'குதபகாலம்" என்று சொல்லப்படுகின்ற இந்த காலக் கட்டத்திலே, நீங்கள் அரச மரத்தைச்சுற்றி வலம் வரும்போது, ஒரு குறிப்பிட்ட அமாவசை நாளிலிருந்து உங்களுடைய ஆசைகள் நிறைவேறத்துவங்கும். 


இதை சுமார் ஒரு வருட காலம் நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.


அதனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அரிய ஜோதிட ரகசியத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களின் வறுமை நிலையிலிருந்து,

 செழுமை நிலைக்கு உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்.

 புத்தம் புது கோடை விடுமுறை 

ஒவ்வொரு பெற்றோரும் தாய் தந்தை என்று இருவராக இருந்தாலும் இரண்டு கண்களும் ஒரே பார்வையை தருவது போல் இருவரின் எண்ணங்களும் தன் குழந்தைகள் மீது அல்லவா இருக்கும் அப்படித்தானே...

பின் இந்த கட்டுரை பலன்கள் அள்ளித் தருமே...

ஆண்டுதோறும் கோடை விடுமுறை வருகிறது சுற்றுலா என்ற பெயரில் வேகாத வெயிலில் கூட்டத்துடன் செல்வது வருவது ஒருபுறம் இருந்தாலும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வீட்டில் எவ்வாறு நம் எதிர்காலத்தை படிப்படியாக முன்னேற்றம் யுக்திகளை கையாளலாம் என்று எண்ணிகையில்....

உங்கள் குழந்தைகளுடன் குறைந்தது இரண்டு முறையாவது உணவு உண்ணுங்கள். 


விவசாயிகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்பு பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.  அவர்களிடம் உணவை வீணாக்காதீர்கள் என்று சொல்லுங்கள்.


அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவட்டும். இதன் மூலம், குழந்தைகள் உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்வார்கள்.


அவர்கள் உங்களோடு சமைக்க உதவட்டும். அவர்களுக்காக அவர்களே காய்கறிகள் அல்லது சாலட் தயாரிக்கட்டும்.


மூன்று அண்டை வீடுகளுக்கு கூட்டிச் செல்லுங்கள். அவர்களைப் பற்றி மேலும் அறிய, நெருங்கி பழக...


தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்று வாருங்கள். அவர்களின் அன்பும் உணர்ச்சிபூர்வமான ஆதரவும் உங்கள் குழந்தைகளின் நெடிய வாழ்வுக்கு ஒளி காட்டவில்லை.


குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்...


உள்ளூர் திருவிழாவையும்  உள்ளூர் சந்தையையும் தவறவிடாதீர்கள்...


சமையலறை தோட்டத்தை உருவாக்க,விதைக்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க.

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி அறிவு பேருதவி செய்யும்.


உங்கள் குழந்தைப் பருவம் மற்றும் உங்கள் குடும்ப வரலாறு பற்றி குழந்தைகளோடு அளவளாவுங்கள்.


உங்கள் குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். காயப்படட்டும்,அழுக்காகட்டும்.

எப்போதாவது விழுந்து வலியைத் தாங்கிக் கொள்வது அவர்களுக்கு நல்லது. சோபா மெத்தைகள் போன்ற சொகுசுகள் சோம்பேறியாக்க வல்லவை.


நாய், பூனை, பறவை,மீன் போன்ற எந்த செல்லப் பிராணியையும் அவர்கள் வைத்திருக்கலாமே!


அவர்களுக்கு சில நாட்டுப்புற பாடல்களை பாட இசைக்க உதவுங்கள்...


உங்கள் குழந்தைகளுக்கு வண்ணமயமான படங்களுடன் 

சில கதைப் புத்தகங்களை படிக்கக் கொடுங்கள்.


உங்கள் குழந்தைகளை டிவி, மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களிலிருந்து இப்போதாவது விலகி இருக்கலாமே!


குழந்தைகளுக்கு சாக்லேட், ஜெல்லி, கிரீம் கேக், சிப்ஸ்,பானங்கள், பேக்கரி பொருட்கள், பஃப்ஸ் மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுகள்... வழங்குவதைத் தவிர்க்க!


உங்கள் குழந்தைகளின் கண்களைப் பார்த்து இவர்களைப் போன்ற அற்புதமான பரிசை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்...


ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுக்க இப்போது இன்னும் முனையுங்கள்...


 அன்புடையீர் வணக்கம் நம்முடைய பாரத நாட்டின் பழம்பெறும் பெருமையை உலகெங்கும் அறிய செய்யும் அற்புதம் புராணங்களும் இதிகாசங்களும் ஆகும் அல்லவா 

அதன் அடிப்படையில் பகவத் கீதையை தமிழில் வெகு நேர்த்தியாக இணையதளவழியில் ஆன்லைன் வகுப்புகளாக இஸ்கான் தமிழ் கீதா மூலம் நாம் பயின்று தேர்ச்சி பெற்று நம்முடைய பாரத வாழ்வின் உன்னதன் நிலையை பெறலாம்

அதற்குரிய லிங்க் கீழே உள்ளது வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி துவங்க உள்ளது தொடர்ச்சியாக 18 நாட்களில் நாம் பகவத் கீதையின் அடிப்படை வகுப்பில் தேர்ச்சி பெறலாம் லிங்கில் சொடுக்கி வகுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் சேர பணிந்து வேண்டுகிறோம்

*ரெஜிஸ்ட்ரேஷன் லின்க்:*



https://iskcontamilgita.com/registration


   🌈


🌈 *18 நாட்களில் பகவத்கீதை தமிழில்.* - *கட்டணம் இல்லை*


🗓 *துவக்கம்  மார்ச்-26, 2024.*

*செவ்வாய்க்கிழமை*


🤔 *வாழும் கலையை அறிந்து கொள்ளுங்கள்*

🤔 *மனித பிறவியின் நோக்கம் என்ன* ? 

அறிந்துகொள்ள பகவத் கீதையின் சாராம்சம் தமிழில்.



⏰ *வகுப்பு நேரம்:  மதியம் 3 மணி, இரவு 9 மணி*


🌈 உங்களுடைய அனைத்து *சமூக வலைத்தளங்களில்* பகிர்ந்துகொண்டு பகவத் கீதை பற்றிய ஞானம் அனைவரையும் சென்றடையவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றிடவும் வேண்டுகிறோம். 

*நன்றி.  ஹரே கிருஷ்ணா.*🙏

 கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் 12-03-2024-ல் பரிபூரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் 

  அன்னார் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி இந்தியாவுக்கே ஆசி வழங்கினார் தன்னுடைய பணி நிறைவுற்றதாக எண்ணி தற்போது இறைவன் திருவடி நிழலை அடைந்தார் சாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோயில்களுக்கும் கோவில்களுக்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

🌹💐🙏🙏🙏🌹💐 ஓம் சாந்தி🌹💐

இந்து சமயத்திற்கு ஆதரவாக போராடக்கூடிய துணிச்சல் மிக்கவர் 

வாழ்நாள் முழுமைக்கும் சிவ பக்தி தழைக்க பல்வேறு குடமுழுக்குகளும் ஆலய நிர்மாணங்களும் அமைய துணை நின்றவர்கள்..

 நவக்கிரக கோட்டை கோவிலை புதிதாக நிர்மாணித்து குடமுழுக்கு செய்தார்கள் 

அவர்கள் பரிபூரணமடைந்தது இந்து மதத்திற்கு பேரிழப்பாகும்


2006 இல் கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூரில் வெகு விமரிசையாக பல்வேறு மடங்கள் மற்றும் அரசு துறை பணி சார்ந்த வல்லுநர்கள் சார்பாக ஸ்ரீ ஸ்ரீ சாக்த  சிவலிங்கேஸ்வர சுவாமி  தலைமையில் அவர் தம் திருக்கரங்களால் 

ஜோதிட கலைமாமணி விருது அடியோங்கள் பெற்றோம்.. அண்ணாரின் சிவப்ராப்த செய்தி அறிந்து மிக துயருற்றோம்.  இறையாய் நிலைத்து அருள் புரிய பிரார்த்திப்போம்...

தமிழ் ஜோதிட தம்பதி JOTHIDA THAMBATHI USHA RENGAN



 திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்

ஸ்ரீ ஸ்ரீ ராமபிரம்மேய குலசேகர ராமானுஜ ஜீயர் மடம் சார்பாக திரு நட்சத்திர விழாவின்போது வைஷ்ணவ சம்பிரதாய சான்றோர்கள் ஜோதிட சிகாமணிகள் பாகவத கைங்கரிய தரார்கள் மற்றும் மடத்து சேவையாளர்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழாவும் சீதா கல்யாண அகண்ட நாமம் ஆகிய மூன்று நாள் உற்சவங்கள் நடைபெற்றது. 16 7 2023 மாலை நடைபெற்ற விழாவில் அடியேனுக்கும்

கால ஞான வித்யாபூஷணம் என்ற விருது







ஜோதிட தம்பதியாகிய எங்களுக்கு வழங்கிய கௌரவித்த மகிழ்ச்சி பதிவு செய்து மகிழ்கிறோம்..

 ஆடி அமாவாசை..

ஆகஸ்ட் 16ம் தேதி காலை ஸ்நானம், தானம் செய்வதற்கான நேரம் தொடங்குகிறது. காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். அதிகாலை 4.24 முதல் 5.07 வரை பிரம்ம முஹூர்த்தம் இருக்கும். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்.

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.

 ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.

 சிவன் கோயிலுக்கு சென்று இதை செய்தால் போதும்.. தீராத நோய்கள் கூட குணமாகும்..

தவிர்க்க வேண்டியவை

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் எப்படி சுத்தம் செய்து வைத்திருப்போமோ, அப்படி அமாவாசை தினத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அமாவாசை நாளில் தெரியாமல் கூட வாசலில் கோலம் போடக்கூடாது.

காகத்திற்கு அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசை யாருக்கு திதி கொடுப்பது எப்படி?

தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆகியோர் ஆடி அமாவாசையில் விரதம் இருக்கலாம்


தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை