தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 வணக்கம் 

வாருங்கள் வாருங்கள்

 வீரவநல்லூருக்கு வாருங்கள்...

 வரவேற்பதில் முதல் மகிழ்ச்சி வெள்ளையடித்து வண்ணங்கள் தீட்டி வீடுகள் தோறும் அழகு மலர செய்து வாசலிலே அற்புதமாய் கோலங்கள் இட்டு கோலங்கள் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுத்தி உத்திராயண புண்ணிய காலம் துவங்குவதால் ஒவ்வொரு வீட்டிலும் சுப காரியங்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் இன்று முதல் நாளும் தொடர்ந்து உள்ளம் மகிழ உறவுகள் கொண்டாட வரவிருக்கும் மகர சங்கராந்தி தேவியை வருக வருக என வரவேற்று பொங்கலோ பொங்கல் என்று சர்க்கரை பொங்கலுக்கு சூரிய பகவான் முதல் குலதெய்வ வழிபாடு வரை மானசீகப் பிரார்த்தனைகளுடன் வணங்கி மகிழ்கிறோம் வாழ்த்தி மகிழ்கிறோம். www.tamil-astrology.in

 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் நாள் என் தந்தையார் கே.எஸ். நாராயணய்யர் அவர்கள் தனது 90 வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் யார் யார் என் முன்னால் நிற்கிறார்கள் குடும்பத்தினர் சமூகத்தினர் முக்கிய சங்க உறுப்பினர்கள் சுற்றிலும் நிற்க இரு நாட்களாக கண் சற்றே திறந்த தந்தையார் முழு கண்ணையும் திறந்தவராக அம்மாவின் நெற்றியைப் பார்த்த வண்ணம்....

 விடிந்தால் கார்த்திகை


ஒன்றாம் நாள்...

 ஆன்மீகத்தின் அடையாளங்களுடன் விடியும் பொழுதாகும்.. 

நம் குடும்பத்திற்குள் தான் இல்லாது போகும் முதல் சூரிய உதயம் கார்த்திகை ஒன்று...

 இந்த மாத விழாக்களே உங்களுக்கு ஆன்மீகம் தொடர்ந்து கற்பிக்கும்.

 தொடரும் ஒவ்வொரு கார்த்திகை மாதப்பிறப்பு தோறும் குடும்ப சிந்தனையை மிகைப்படுத்துவேன் என்ற செய்தியுடன் அவரின் ஆன்மா சாந்தி பெற்றதாக அமைந்தது....

 அந்த கார்த்திகை மாதத்தின் சிறப்பை அவ்வப்போதும் நினைப்பதுண்டு...

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்...


_*கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்*_ 


*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*


*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*


*3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*


*4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.*


*5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.*


*6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.*


*7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.*


*8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.*


*9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.*


*10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.*


*11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.*


*12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.*


*13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.*


*14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.*


*15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.*


*16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.*


*17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.*


*18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.*


*19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.*


*20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.*


*21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.*


*22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.*


*23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.*


*24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.*


*25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.*


*26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.*


*27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*


*28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.*


*29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.*


*30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.*


*31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.*


*32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.*


*33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.*


*34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.*


*35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.*


*36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.*


*37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.*


*38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.*


*39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.*


*40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!*


*41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!*


*42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.*


*43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.*


*44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.*


*45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.*


*46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.*


*47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.*


*48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.*


*49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.*


*50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.*


*51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.*

🙏


*கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்*_ 


*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*


*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*


*3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*


*4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.*


*5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.*


*6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.*


*7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.*


*8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.*


*9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.*


*10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.*


*11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.*


*12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.*


*13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.*


*14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.*


*15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.*


*16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.*


*17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.*


*18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.*


*19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.*


*20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.*


*21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.*


*22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.*


*23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.*


*24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.*


*25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.*


*26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.*


*27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*


*28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.*


*29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.*


*30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.*


*31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.*


*32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.*


*33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.*


*34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.*


*35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.*


*36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.*


*37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.*


*38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.*


*39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.*


*40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!*


*41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!*


*42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.*


*43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.*


*44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.*


*45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.*


*46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.*


*47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.*


*48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.*


*49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.*


*50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.*


*51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.*

🙏


 *நாலாயிர திவ்யப்பிரபந்தம்*


நாலாயிர திவ்ய பிரபந்தம்

தொகுக்கப்பட்ட வரலாறு

ஓம் நமோ நாராயணா

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறு இதோ தமிழ்நாடு திருநெல்வேலி தூத்துக்குடி அருகாமை ஆழ்வார் திருநகரி ஸ்தலத்தின் பெருமையோ பெருமையல்லவா.,

திருமங்கையாழ்வார்   காலத்திற்குப்பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டு விட்டார்கள். இவ்வுலகில் 4000 ஆண்டுகள்    ஆழ்வார்கள்  பாசுரங்கள்  வழக்கொழிந்துபோயின. 

 

4000 ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் என்னும் வைணவர் அவதரித்தார்.


அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்திகொண்டு அப்பெருமானுக்கான கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவந்தார். 


  அவர் ஓர்நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலுக்குச்சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தார்.


அப்போது தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள் 


*ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*


*நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*


*சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*


*ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.*


எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அருளிச்செய்த  பாசுரங்கள் பதினொன்றையும் இனிய இசையில்பாடி வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.


அவ்வடியார்கள் பாடிய

*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*


*கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்*


*குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்*


*மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.*


 என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது.   


அவர் அவ்வடியார்களிடத்தில்

*ஓராயிரத்துள் இப்பத்தும்* என்றால் "இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ ? அவற்றை நீவிர் அறிவீரோ ?" என வினவினார்.


அதற்கு அவ்வடியார்கள்

 "சுவாமி !

இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம்." இவை நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்.  நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள்

மட்டுமே செவிவழியாக  போதிக்கப்பட்டுவருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த பராங்குசதாசர் என்பவர் தற்போது திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்துவருகிறார். அவரை தாங்கள் அனுகினால் தங்கள் சந்தேகம் தீரவாய்ப்புள்ளது" என்று கூறினார்கள். 


நாதமுனிகள் 1000 பாசுரங்களையும் அறியும் ஆர்வமுடன் ஆழ்வார் திருநகரி சென்று பராங்குசதாசரைச் சந்தித்தார். அவரைப் பணிவுடன் வணங்கி தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.


பராங்குசதாசர் " அன்பரே ! நம்மாழ்வாரின் 1000 பாடல்களையும் அறியும் உம் ஆர்வத்தை யாம் பாராட்டுகிறோம். ஆனால் எமக்கே பதினோறு பாசுரங்கள்தான் தெரியும். நம்மாழ்வார் ஒருவரே 1000 பாசுரங்களையும் கூறமுடியும். அவர் பரமபதம் சென்று (உயிர் துறந்து) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய ? எம் மூதாதையரான மதுரகவியாழ்வார் தம் குருவான நம்மாழ்வாரையை இறைவனாக பாவித்து *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  எனத்துவங்கி பதினோரு பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார். அவற்றை நான் உமக்கு உபதேசிக்கிறேன். அவற்றை நீர் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்தடியில் அமர்ந்து இசைத்தால்  ஒரு வேளை நம்மாழ்வார்  பரமபதத்தினின்றும் மீண்டுவந்து உமக்கு 1000 பாசுரங்களையும் உபதேசிக்க வாய்ப்புள்ளது." என்று கூறி *கண்ணிநுண் சிறுத்தாம்பு* துவங்கி 11 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்தார்.


நாதமுனிகள் புளியமரத்தடியில் அமர்ந்து, நம்மாழ்வாரை மனதிலிருத்தி அப்பதினோரு பாசுரங்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தார். 10,000 மாவது முறை பாடிமுடித்ததும் நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். நம்மாழ்வார் குருவாக புளியமரத்தடியில் அமர்ந்து நாதமுனிகளுக்கு திருவாய்மொழி 1102 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் மிக்க மகழ்ச்சி அடைந்து நம்மாழ்வாரை வீழ்ந்து வணங்கி விடைபெற எத்தனித்தார். நம்மாழ்வார் "ஆயிரம் போதுமோ ? மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த மேலும் 3000 பாசுரங்கள் வேண்டாவோ ?" என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த நாதமுனிகள் அவற்றையும் உபதேசித்தருளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மேலும் 3000 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். 


நாதமுனிகள் பேரானந்தமடைந்தார்.

நம்மாழ்வார் சந்தேகமிருப்பின் நாளை வாரும் என்றார்.

மறுநாள் நாதமுனிகள் மீண்டும் புளியமரத்தடிக்குச்சென்றார். அங்கே முன்னதாகவே  நம்மாழ்வார் வந்து  வீற்றிருந்தார். 


" சுவாமி ! *பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்*


*நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை*


*கலியும்கெடும் கண்டுகொண்மின்*"

என்று கூறியுள்ளீர்களே, எப்படி எமனுக்கு வேலையில்லாமல் போகும் ?" என்று கேட்டார் நாதமுனிகள்.


உடனே நம்மாழ்வார்  தம் பையிலிருந்து ஓர் விக்கிரகத்தை எடுத்து நாதமுனிகளிடம் கொடுத்து, " இவர் பெயர் இராமானுஜர். இவர் பிற்காலத்தில் இவ்வுலகில் அவதரித்து வைணவ சம்பிரதாயத்தை  நிலைநாட்டுவார். அப்போது மக்கள்  அனைவரும் இவரைப்பின்பற்றி அறவழி நடப்பார்கள். எனவே எமனுக்கு வேலையில்லாமல் போகும்" எனக்கூறினார். மேலும் "இவ்விக்கிரகத்திலுள்ள   உத்தமரை தேடிக்கண்டுபிடித்து வைணவ ஆச்சார்யராகச் செய்யவேண்டியது உமது கடமையாகும்" என்றும் கட்டளையிட்டு மறைந்துபோனார் (மீண்டும் பரமபதம் சென்றார்).


நாதமுனிகள் 4000 பாசுரங்களைப்பெற்ற மகிழ்ச்சியோடும், பவிசாச்சார்ய விக்கிரகத்தைப்பெற்று (நம்மாழ்வார் அளித்த விக்கிரகம். இது தற்போது ஆழ்வார் திருநகரியில் உள்ளது) வைணவத்தைச் சிறப்பிக்கும் கடமை உணர்வோடும் காட்டுமன்னார்கோயில் வந்து சேர்ந்தார்.


4000 பாசுரங்களையும் ஓலைச்சுவடியில் பதிவேற்றினார். அவற்றிற்கு *நாலாயிர திவ்யப்பிரபந்தம்* எனப்பெயர் சூட்டினார். முதலாமாயிரம், இரண்டாமாயிரம், மூன்றாமாயிரம் மற்றும் நாலாமாயிரம் என நான்கு தொகுதிகளாகப்பிரித்தார். 


*முதலாமாயிரம்*


1.பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு : 12 பாசுரங்கள்

2.பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி : 461 பாசுரங்கள் 

3.ஆண்டாள் - திருப்பாவை : 30 பாசுரங்கள் 

4.ஆண்டாள் - நாச்சியார் திருமொழி : 143 பாசுரங்கள் 

5.குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி : 105 பாசுரங்கள் 

6.திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் : 120 பாசுரங்கள் 

7.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 45 பாசுரங்கள் 

8.தொண்டரடிப்பொடியாழ்வார்  - திருப்பள்ளியெழுச்சி : 10 பாசுரங்கள் 

9.திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் 

10.மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு : 11 பாசுரங்கள் 


முதலாமாயிரம் மொத்தம்  947 பாசுரங்கள். 


*இரண்டாமாயிரம்*


1.திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி : 1084 பாசுரங்கள் 

2.திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் : 20 பாசுரங்கள் 

3.திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் : 30 பாசுரங்கள் 


இரண்டாமாயிரம் மொத்தம் 1134 பாசுரங்கள்.


*மூன்றாமாயிரம்*


1.பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

2.பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி :  100 பாசுரங்கள் 

3.பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

4.திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி : 96 பாசுரங்கள் 

5.நம்மாழ்வார் - திருவிருத்தம் : 100 பாசுரங்கள் 

6.நம்மாழ்வார் - திருவாசிரியம் : 7 பாசுரங்கள் 

7.நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி  : 87 பாசுரங்கள் 

8.திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை  : 1 பாசுரம்

9.திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல் : 40 பாசுரங்கள்

10. திருமங்கையாழ்வார் - பெரிய திருமடல்  : 78 பாசுரங்கள் 


மூன்றாமாயிரம் மொத்தம் 709 பாசுரங்கள் 


*நாலாமாயிரம்*


நம்மாழ்வார் - திருவாய்மொழி : 1102 பாசுரங்கள் 


நாலாமாயிரம் மொத்தம் 1102 பாசுரங்கள்


முதலாமாயிரம்     :   947 பாசுரங்கள் 

இரண்டாமாயிரம் :1134 பாசுரங்கள் 

மூன்றாமாயிரம்    :    709 பாசுரங்கள் 

நாலாமாயிரம்        :1102 பாசுரங்கள் 

                                   _________

மொத்தம்                 :3892 பாசுரங்கள்            _________


இவ்வாறு நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்யப்பிரபந்தமே இப்போது நாம் பாராயணம் செய்யும் நூலாகும்.


தற்போது மூன்றாமாயிரத்தில் இடம்பெற்றுள்ள   இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்கள்  இராமானுஜர் காலத்திற்குப்பின் சேர்க்கப்பட்டவை.


வழக்கத்தில் இல்லாமலிருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த்தை மீட்டு நமக்களித்த ஸ்ரீமந் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யராகப் போற்றப்படுகிறார்.


இவர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உலகெங்கும் பரவவேண்டும் என விரும்பினார். எனவே தம் தமக்கை மகன்களான கீழையகத்தாண்டான், மேலையகத்தாண்டான் ஆகிய இருவரையும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை இசையமைத்து பாடி பாமர மக்களிடையே பரப்புமாறு கட்டளையிட்டார்.


அவர்களிருவரும் சிறந்த இசை வல்லுனர்கள் ஆதலால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தைப் பண்ணோடு பாடும் பணியைச் செவ்வனே செய்தார்கள். 


இவர்கள் ஊர்தோறும் சென்று திருமால் கோயில்களில் பண்ணொடும் பாசுரங்களைப்பாடிப் பரப்பிய தொண்டு அரையர்சேவை என்றழைக்கப்பட்டது. 


இவர்கள் மரபின்வழி வந்தவர்களே இந்நாளில் அரையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இப்போதும் திருவரங்கம், திருவில்லிப்புத்தூர், திருவானமாமலை,திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் அரையர்கள் மார்கழிமாதம் முழுவதும் அரையர்சேவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


திவ்யப்பிரபந்தத்தை முதன் முதலில் அருளிச்செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். அவர் அருளிய முதல் பாசுரம் 

*வையம் தகளியா வார்கடலே நெய்யாக*


*வெய்ய கதிரோன் விளக்காக செய்ய*


*சுடாராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை*


*இடாழி நீங்குகவே என்று.*

திவ்யப்பிரபந்தம் முதன் முதலில் தோன்றிய ஊர்  திருக்கோவலுராகும். 


ஆனால் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுக்கும்போது 

முதன் முதலில் எல்லாம் வல்ல எம்பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனை வாழ்த்தித் துவங்குமாறு திவ்யப்பிரபந்தம் அமைய வேண்டும் என விரும்பினார். எனவே


*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்*


*மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு*


எனத்துவங்கும் ஆழ்வார்கள் வரிசையில்  எட்டாவது வைணவ அடியாராக அவதரித்த  பெரியாழ்வார் அருளிச்செய்த 12 பாசுரங்களை திவ்யப்பிரபந்தத்தின் முகப்புப் பகுதியாக வைத்து, அதற்குத் *திருப்பல்லாண்டு* எனவும் பெயர் சூட்டினார். 


நம்மாழ்வாரிடமிருந்து ஆழ்வார்கள் பாசுரங்கள் நாலாயிரத்தையும் பெறுதற்குக் காரணமாக இருந்த மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 11 பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அவற்றை முதலாமாயிரத்தின் கடைசிப்பகுதியாக அமைத்து அப்பகுதிக்குக்  *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  என்றே பெயரிட்டார். 


இதுவே நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறாகும்.


ஸ்ரீ வைணவ குருபரம்பரையை நிலைநாட்டிய ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் உய்யக்கொண்டான், குருகைக்காவலப்பன் ஆகியோர் முதன்மையான சீடர்கள் ஆவார்கள்.

உய்யக்கொண்டான் பக்தி மார்கத்தையும், குருகைக்காவலப்பன் யோக மார்கத்தையும், தம் குருநாதரிடம் கசடறக் கற்றார்கள்.


பாமரர்களை உய்விக்கச் சிறந்த நெறி பக்தி மார்க்கமே என உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள், தமக்குப்பின் உய்யககொண்டாரை ஆச்சார்யராக நியமித்து அவரிடம் நம்மாழ்வார் அளித்த பவிதாச்சார்ய விக்கிரகத்தைக் கொடுத்து இராமானுஜரை கண்டறியச்சொன்னார்.


உய்யக்கொண்டாரிடமிருந்த அவ்விக்கிரகம் மணக்கால்நம்பி மூலமாக ஆளவந்தாரை வந்தடைந்தது. ஆளவந்தார் காஞ்சிபுரம் வரதாஜப்பெருமாள் கோயிலுக்கு யாத்திரை சென்றார். அங்கு திருக்கச்சி நம்பிகள் என்னும் அடியவர் மூலமாக இளையாழ்வான் என்னும் பெயர்கொண்ட ஒளிபொருந்திய தோற்றத்துடன் கூடிய வைணவ இளைஞன் ஒருவனைக்கண்டார். அவ்விளைஞனே தம்மிடமிருக்கும் விக்கிரகத்திலுள்ள எதிர்கால ஆச்சார்யர் என அடையாளம் கண்டார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு  நிறைவேறப்போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.


தம் அனுக்கச்சீடரான பெரியநம்பிகளை, இளையாழ்வானை காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துவரப்பணித்தார். அவர்கள் ஸ்ரீரங்கம் வருவதற்குள் ஆளவந்தார் (இவ்வுலக வாழ்வை நீத்தார்) பரமபதம் அடைந்தார்.


பின்னாளில் பெரிய நம்பிகளின் பெரு முயற்சியால்  இளையாழ்வான் சந்நியாசம் ஏற்று இராமானுஜர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீரங்கம் ஜுயராகப் பொறுப்பேற்றார். வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார்.


இவ்வாறாக ஸ்ரீமந் நாதமுனிகள் மறைந்து ஏறத்தாழ  400 ஆண்டுகளுக்குப்பிறகு  இராமானுஜர் ஆச்சார்யா பீடத்தை அலங்கரித்தார்.

 *சௌராஷ்டிரா சமூக மகாஜனங்களுக்கு சந்தோஷமான செய்தி*


சௌராஷ்டிர சமூக மக்கள் பல ஆண்டுகளாக நம்முடைய சௌராஷ்ட்ர சமூகத்தை வழிநடத்த ஒரு ஆச்சாரியன் மற்றும் குரு பீடம் தேவை என்று எம்பெருமானிடத்தில் பிரார்த்தனை செய்து வந்தனர். நம்முடைய சமூக மக்களின் பிரார்த்தனைக்கு இணங்கி எம்பெருமான் உத்தரவாலும், எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர், பூர்வாசாரியர்கள்  ஆசிர்வாதத்தாலும் நம்முடைய சமூகத்தை சார்ந்த *வீரவநல்லூர் ஸ்ரீ ஸ்ரீ விஜயரெங்க சுவாமிகளுக்கு ஜீயர் பட்டம் கொடுக்க ஏற்பாடு ஆகியுள்ளது.* 


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ விஜயரங்க சுவாமிகள் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மேலும் அனைத்து ஜீயர் ஸ்வாமிகளிடம் சம்பந்தம் உள்ளவர். 


ஸ்ரீ ஸ்ரீ விஜயரங்க ஸ்வாமிகளின்  ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தில் உள்ள ஈடுபாடு, அவர் எம்பெருமான் மீது கொண்டுள்ள பக்தி, மற்றும் அனைத்து ஜீயர் ஸ்வாமிகள் இடத்திலும் கொண்டுள்ள குரு பக்தியையும் அங்கீகரித்து *மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ  ஜீயர்  சுவாமிகள்*, நமது *ஸ்ரீவிஜயரெங்கன் சுவாமிகளுக்கு* ஸன்னியாச ஆசிரமம் அதாவது *ஜீயர் பட்டம்* அளிக்க உள்ளார்கள். 


*பட்டாபிஷேக நிகழ்ச்சி* வருகின்ற ஸ்வஸ்தி ஸ்ரீ சுபகிருது வருஷம் ஆனி மாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை ஜேஷ்டா நட்சத்திரம் கூடிய சுப சிம்ம லக்னத்தில் *(11. 7 .2022) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்* ஸ்ரீரங்க திவ்ய தம்பதிகள் உத்தரவின்படியும், பூர்வாச்சாரியார்கள் மற்றும் அனைத்து ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியோடு நடைபெற்றது

ஸ்ரீ ஸ்ரீ விஜயரங்க சுவாமிகள் ஸ்ரீ குலசேகர ராமானுஜ ஜீயர்



மடத்தின் பீடாதிபதியாக ,  ஜீயர் ஸ்வாமிகளாக இருந்து அனுகிரகம் செய்வார்கள்.*

*இது சௌராஷ்டிர சமூகத்தினரின் வரலாற்றில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி*. 

எனவே நமது சௌராஷ்டிர மகா ஜனங்கள், சமூகப் பெரியோர்கள், மத்திய சபை நிர்வாகிகள், அனைத்து ஊர் சபை சபை நிர்வாகிகள், சமூக இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஸ்ரீ வைஷ்ணவ

மெய்யன்பர்கள் அனைவரும் தவறாது இந்த சரித்திரபூர்வமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும், ஆச்சரிய அனுகிரகத்தை பெற்று உய்யுமாறும் பிரார்த்திக்கப்படுகிறார்கள்.

 

















மஹாளய / பித்ரு பக்ஷம் என்னும் 16 நாட்களிலும் (11-09,2022 - 25.09.2022)
  இறந்து போன அப்பா தாத்தா அவரது அப்பா அம்மா பாட்டி முதலான நமது குடும்பத்தில் நம்முடன் பல காலம் வாழ்ந்து, இறந்த பின்னால், பித்ருக்களாக வாழும் நமது முன்னோர்கள், அனைவரும்  யமதர்மராஜாவால் ஏவப்பட்டு, நம்மைப் பார்த்து ஆசி வழங்க, நம் இருக்கும் பூ லோகம் தேடி வரும் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும்.


மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களை பூஜித்து தர்ப்பணம் ஹிரண்யசிராத்தம் செய்து அவர்களுக்கு அன்ன ஆஹாரம் ஜலம் அளித்து அவர்களை ஸந்தோஷப்படுத்த வேண்டும், அப்படி இல்லாமல் எப்போதும்போல் நமது சொந்த வேலையை செய்து கொண்டு இருந்தால் விருந்தாளியை கவனிக்காமல் நமது வேலையை கவனித்துக் கொண்டிருந்தால் விருந்தாளிக்கு எப்படி கோபம் வருமோ அவ்வாறே பித்ருக்களும் நம்மிடம் கோபிப்பார்கள். பித்ரு தாபம் / கோபம் நல்லதல்ல. ஆகவே ஒவ்வொருவரும் தனது சக்திக்குத் தக்கவாறு சிறிய அளவிளாவது மஹாளயத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.


அத்துடன் பித்ருபக்ஷமான மஹாளய பக்ஷத்தில் சில ஆகார ஆசார நியமங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் போன்ற பித்ருக்களுக்கான கர்மாக்கள் முழுப் பலனைத்தரும், அதாவது ஸாதாரண நாட்களில் பற்பல இடங்களிலும் பலதரப்பட்ட உணவை சாப்பிட்டாலும் கூட, மஹாளய பக்ஷம் என்னும் 16 நாட்களிலாவது ஹோட்டல் திருமணமண்டபம் போன்ற வெளி இடங்களில் சாப்பிடாமல் வீட்டில் தாயார் மனைவி ஸஹோதரி ஆகியோர் தயார்செய்த உணவையே சாப்பிட முயற்சிக்க வேண்டும். அதிலும் வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முருங்கைக்காய், சுரைக்காய், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கோவக்காய், நாய்குடை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற நிஷித்தமான காய்கறி  கீரை வகைகளையும் சாப்பாட்டில் சேர்ப்பதை  தவிர்க்க வேண்டும்.


பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் செய்பவரின் மனைவிக்கும் இந்த நியமங்கள் உண்டு, தனது கணவன்தானே தர்ப்பணம் செய்கின்றார், அவர் மட்டும் ஆகார ஆசார நியமத்துடன் இருந்தால் போதுமே, நமக்கு என்ன என்று நினைத்து அலுவலகம் செல்லும் பெண்கள் ஆசாரமின்றி இருக்கக் கூடாது, சாஸ்திரங்களில் கர்த்ருத்வம் என்பது தனி ஒருவரிடம் மட்டுமில்லை. கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் பரவி இருக்கும் வ்யாஸஜ்ய வ்ருத்தித்வம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் செய்யும் கணவனுக்கு என்ன நியமமோ அதே நியமம் அவரது மனைவிக்கும் உண்டு. அப்போதுதான் ஸம்பூர்ண பலன் கிட்டும்.


மஹாளய பக்ஷம் போன்ற பித்ரு பக்ஷ நாட்களில் பலரையும் அழைத்து பலதரப்பட்ட உணவளித்து நடத்தப்படும் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஹாளய பக்ஷத்தில் எந்த ஜாதிக்காரரும் எந்தச் சூழ்நிலையிலும் திருமணத்தை நடத்த சாஸ்திரம் அனுமதிக்கவேயில்லை.


ஆகவே மறைந்த நம் முன்னோர்கள் மூலம் நமக்குத் தேவையான மன நிம்மதி, குழந்தைச்செல்வம், கடனின்மை மற்றும் வியாதியின்மை, ஆயுர், ஆரோக்யம் போன்ற பற்பல ஸுகங்களை ஸுலபமாகப் பெறக்கூடிய மஹாளயபக்ஷம் 16 நாட்களிலும் முன் கூறப்பட்ட சில அதம பஷ ஆகார ஆசார நியமங்களை அனுஷ்டித்து பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பண கர்மாக்கள் செய்து போஜன தாம்பூலம் அளித்து பித்ருக்களை ஸந்தோஷிக்கச் செய்து மன நிம்மதியுடனும் ஆரோக்யத்துடனும் நலமாக வாழ, பித்ருக்கள் ஆசீர்வாதம் பெற அனைவரும் மஹாளய பக்ஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 

மன்வாதி நாட்கள்               14, 

யுகாதி நாட்கள்                     4, 

மாதப்பிறப்பு நாட்கள்         12, 

அமாவாசை                         12, 

மகாளய பட்சம்                   16, 

வ்யதீபாதம்                         13, 

வைத்ருதி                            13, 

அஷ்டகா                               4, 

அன்வஷ்டகா                        4, 

பூர்வேத்யு                              4  ஆக 96 நாட்கள். 


இந்த நாட்களில் செய்யப்பெறும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.   அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது.    


6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.


7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.


8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்குத் தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்குச் சரியாகச் சென்றடையும்.


9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்குத் தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.


10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறித் தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.


11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்கள் போன்றவை வேண்டாம்.


12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.


13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பணக் காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழுப் பலன்களையும் தரவல்லது.


15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.


16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்பெறும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.


17. திருவாலங்காடு, திருவள்ளூர், இராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்தது.


18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்பெறுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்குத்  தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.


20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயைத் தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று கருதப்பெறுகிறது.


21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியைப் பெற வழிவகை ஏற்படும்.


22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்குத் துளசி மாலை அணிவிப்பது நல்லது.


23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்குக் கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களைக் கொடுக்கும்.


24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களைத் திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.


25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.


28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.


29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாகப் பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.


30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.


31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.


32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக் கூடாது.

 துளசிதாசருக்கு உதவிய ஆஞ்சநேயர்

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். 

விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார். 

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

 அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒரு வாறு அமைதி கிடைத்தது.

இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைந்து நின்றது.

துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார். எனக்கு ராம தரிசனம் கிடைக்க

வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. 

இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே, என்றது. 

எப்படி? என கேட்டார் துளசிதாசர்.

உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே

என்றது.

எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும். ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். 

நீங்கள்வருவதற்கு முன்பே வந்து விடுவார். 

பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து

வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார்.

உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.

அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து

விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார்.

அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார்.

ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம்.

நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம்

அடைந்து விட்டார் தாசர். 

சபை முழுவதும் கண்ணீர் விட்டு

கதறியது. 

எங்கும் ராம நாம கோஷம்.

பின் வெகு நேரம் ஆயிற்று.

துளசிதாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. 

பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார்.

பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். 

அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். 

துளசி தாசரும், கண் விழித்து நான் எங்கிருக்கிறேன் என்று வினவினார்.

இதுதான் சித்ர கூடம், இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம்

கிட்டும் என்று கூறினார் அனுமன்.

அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார்.

நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு

என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். 

தாசரும் ராமஜபம் செய்தார். ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக்கொண்டார். 

கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

 மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல்.

அதன் மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார்.

 மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள்.

தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில்

தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக்கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். 

இல்லையே என்றார் தாசர். 

என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.

ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர்.

அதற்கு அனுமன் ராமன் உமது

இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார்.

உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை

அலட்சியம் செய்து விட்டேன். 

வாயு குமாரா? இன்னும் ஒருமுறை

தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன். 

எல்லாம் சரி. நீர் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா?

பார்க்கலாம் என்றார்.

துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். 


வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார். நதியில் நீராடுதல் இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது.

ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில்

மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர்.

ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. 

சுவாமி கோபி சந்தனம் உள்ளதா?

என்று அவர்கள் கேட்டனர். 

இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர். 

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன், சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள்.

(வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது).

அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே,  என்றார் தாசர்.

இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான்.

 இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று

இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான்.

தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான்.

அவர்கள் உட்கார்ந்திருந்திருந்த படித்துறைக்கு அருகே ஒரு மாமரம்.

அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர

துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர

பொருள்: 

(சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். 

ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி

தாசர். 

மறுகணம் ராம,லட்சுமணர்களை காணோம்.

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

 

தை அமாவாசை.

பிலவ வருடம் தைமாதம் 18ம் நாள் திங்கட்கிழமை 31.01.2022 உத்திராடம் திருவோணம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு  வணங்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தை  நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க கிராமங்களில் இப்போது சாத்திரங்களை அறிந்தவர்கள் அநேகமாக இல்லை. நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை  அறிவியல் பூர்வமானவை. உதாரணமாக, நட்சத்திரம் என்றால் என்ன என்று மேலை நாட்டுக்காரர்களுக்கு தெரியும். ஆனால் 'திதி' என்றால் என்ன என்று அவர்களுக்கு இன்னும் தெரியாது. ஆனால், திதியின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து கூறிவிட்டனர்.

 பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசைதிங்கள்கிழமைஜனவரி 31ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தை மாதம்18ம் தேதி பகல் 2மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணி வரை மணி வரை அமாவாசை திதி உள்ளது. என நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம்.

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

 

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். வியாழக்கிழமை தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

 முன்னோர்களை வழிபட்டால் என்ன நன்மை

இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ஆம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்தினால்தான் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.

 தர்ப்பணம் செய்யலாம்

தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

பித்ரு லோகத்தை அடையும் தர்ப்பணம்

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

 சூரியன் மூலம் தர்ப்பணம் சேரும்

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

எள் தர்ப்பணம்

இறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு கடன் நிறைவேற்றியுள்ளார். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.

 திதி கொடுக்க நல்ல நேரம்

ஜனவரி 31.பகல் 2 மணி  முதல் அடுத்த நாள் 12. மணி வரை அமாவாசை திதி உள்ளது. எனவே  நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம். இதன் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும்.

தை அமாவாசை 2022: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்க

ஒருவருடைய ஜாதகத்தில் என்ன தான் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று பலமாக அமர்ந்திருந்தாலும், பித்ரு தோஷம் மட்டும் இருந்தால் அவ்வளவு தான், அவர் என்னதான் பகீரத பிரயத்தனம் செய்தாலும் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. எடுக்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் தான் முடியும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். அவர் மானசீகமாக கும்பிடும் தெய்வம் கூட அவருக்கு துணைக்கு வராமால் ஓரமாக ஓதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை தான் பார்க்கும்.

 

இதற்கு காரணம் பித்ருக்களின் சாபம் தான். பித்ருக்களின் சாபத்தை போக்க வேண்டுமென்றால், முதலில் பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டும். பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டுமென்றால், பித்ரு தோஷத்தை போக்க வேண்டும். பித்ரு தோஷத்தை போக்கிய பின்பே, ஒருவரது ஜாதகமே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும். இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். அதோடு நம்முடைய பித்ரு தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் செய்த மறந்தவர்கள் தை அமாவாசை நாளில் பித்ருக்களை மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகும்.

 ஜாதகம் சொல்வதென்ன

ஒருவருடைய ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகம் என்பதை எப்படி கணக்கிடுவது. ஒருவரது ஜாதகத்தில் பாவ கிரகம் எனப்படும் பாம்பு கிரகங்களான ராகுவும், கேதுவும் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருந்தாலும் சரி, சூரிய சந்திர கிரகங்களோடு சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் சரி, அந்த ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகும்.

 ராகு கேது

ராகுவும் கேதுவும் தான் முன்வினைகளை பிரதிபலிக்கும் கிரகங்களாகும். ராகு நமது தந்தை வழி முன்னோர்களையும், கேது தாய் வழி முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்களாகும். சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கை தெளிவாக காட்டுவதோடு மட்டுமில்லாமல், அந்த பாவங்களை தீர்க்க முடியுமா, முடியாதா? என்பதையும் படம் பிடித்து காட்டும் கிரகங்களாகும்.

 முன்னோர்களின் பாவங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து தான் அவரின் படிப்பு முதல் எதிர்கால வாழ்க்கையும் அமையும். மேற்குறிப்பிட்டவாரு, ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் ராகுவும் கேதுவும் பலமாக உட்கார்ந்துவிட்டால், படிப்பு, வேலை, மண வாழ்க்கை என அத்தனையுமே கேள்விக்குறி தான். அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களும், முன்னோர்கள் செய்த பாவங்களும் தான்.

 பாவ புண்ணியங்கள்

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவங்களே, இப்பிறவியில் அப்படியே தோஷங்களாக மாறி அவரின் ஜாதக கட்டத்தில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்துகொள்கின்றன. அதுவே முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவியில யோக கட்டங்களாக அமைந்துவிடுகின்றன. கூடவே, நமது முன்னோர்களிடம் இருந்து தான் நாம் உடல், பொருள், ஜீவன் என அனைத்தையும் பெறுகிறோம். எனவே, முன்னோர்களின் பாவ-புண்ணியத்தில் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாமும் அனுபவிக்கவேண்டும் என்பது தான் நமது தலைவிதியாகும். புண்ணியம் செய்திருந்தால் அந்த புண்ணியத்தையும் சேர்த்தே அனுபவிக்க வேண்டும்.

 புராணங்கள்

நமது முன்னோர்களின் பாவமும், நாம் முற்பிறவியில் செய்த பாவமும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு, இந்தப் பிறவியிலும், நமக்கு பின்பு நமது சந்ததிகள் என தலைமுறை, தலைமுறையாக நிழல் போல் பின்தொடர்ந்து வரும் என புராணங்களிலும், ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளன. ஆகவே தான், நாம் ஒவ்வொருவரும் நமது பாவத்தையும், நமது முன்னோர்களின் பாவத்தையும் சேர்த்து அழித்து, முன்னோர்களின் ஆன்மாக்களையும், நமது ஆன்மாக்களையும் நற்கதி அடைய வழிவகை செய்ய வேண்டும்.

 மஹாளய பட்சம்

நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடையத்தக்க முறையான பரிகாரங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். பித்ரு தோஷத்தை எவ்வாறு நிவர்த்தி செய்வது?. ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். அதாவது, தமிழ் வருடத்தின் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும்.

 பித்ரு தர்ப்பணம்

இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். ஒரு வேளை, மஹாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், மகாபரணி நட்சத்திர நாளிலும், அமாவாசை திதியிலும் செய்தால் கூட போதும்.

 தை அமாவாசை

குறிப்பாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானம் நம்முடைய அனைத்து தோஷங்களையும், நீக்கும். மிகக்கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வது அவசியமாகும். மேலும் இந்துக்கள் அனைவரும், வாழ்வில் ஒரு முறையாவது ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று பிதுர் தர்ப்பணம் செய்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதீகம். பித்ருக்களை சாந்தப்படுத்தி அவர்களின் ஆசி பெறாமல் நாம் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

தை அமாவாசை  தில ஹோமம் செய்து கொடுக்கும் பிண்டங்களை முன்னோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

ஒருவர் தன்னுடைய முற்பிறவியில், தனது சகோதர சகோரிகளை கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு முறையாக சேரவேண்டிய சொத்துக்களை அபகரித்திருந்தால், மறுபிறவியில், அந்த பாவம் நம்மை பற்றிக்கொண்டு, உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக கொடுமைக்கு ஆளாக நேரிடும். ஒருவர் தனது முற்பிறவியில், தெரிந்தோ தெரியாமலோ கருச்சிதைவு செய்திருந்தாலும் சரி, இப்பிறவியில் என்னதான் கோவில் குளம் என்று சுற்றி வந்தாலும் கூட சந்ததி விருத்தி ஏற்படாமல், தான் ஆண்டு அனுபவிக்கும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று முது மொழியும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்ற திருக்குறளும் எடுத்துரைக்கின்றன. இதில் முற்பகல் என்பது நம்முடைய இந்த பிறவி மட்டுமல்லாது, முற்பிறவியில் நாம் செய்த நற்செயல்களும், பாவச் செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பிறவியில் நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் கூடுமானவரை, நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்று சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும், நம்முடைய வாழ்க்கைக்கு பின்பு, நமது சந்ததிகளுக்கு பித்ரு தோஷமாக மாறி அவர்களின் வாழ்க்கையை அலைக்கழிக்கக் கூடும். அதனால் தான், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களாலும், நமது முன்னோர்கள் செய்த பாவச் செயல்களாலும் பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவர் எவ்வாறான பாவச் செயல்களை செய்தால் பித்ரு தோஷமாக மாறும் என்பதையும் புராணங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

 இப்பிறவியிலும் தொடரும் பாவம் - பெற்றவர்களின் சாபம்

ஒரு ஆண் மகன், முற்பிறவியில் தன்னை பெற்ற தாய் தந்தையரை சரிவர கவனிக்காமல், கட்டிய மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை வெளியில் துரத்திவிட்டால், அவ்வளவு தான், அவர்கள் கோபம் சாபமாக மாறி, மறுபிறவியில் பித்ரு தோஷமாக நம்மை அலைக்கழிக்கும். அதனால் தான், யாருடைய சாபத்திற்கு ஆளானாலும் பெற்றவர்களின் சாபத்திற்கு மட்டும் ஆளாக கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறான பித்ரு தோஷங்கள் தன்னையும், தன்னை நம்பி இருக்கும் ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும் சேர்த்தே பாதிக்கும். தீராத நோய்கள், தேவையற்ற வீண் வம்புகள், குடும்பத்திற்குள் சண்டை, சச்சரவுகள் என பிரச்சனைகளை தூண்டிவிட்டுக்கொண்ட இருக்கும். இதைத்தான் கர்மா என்றும், அந்த கர்மா உங்களுக்கு எதிராக எந்த செயலையும் செய்யவில்லை. நீங்கள் முற்பிறவியில் செய்த வினைகளை ஒரு சிசிடிவி போல் படம் பிடித்து, கால புருஷனிடம் கொடுத்து, நீங்கள் முற்பிறவியில் செய்த வினைக்கு தான் எதிர்வினை ஆற்ற சிறிதும் தவறுவதில்லை என்றும் வேதங்களும் சொல்கின்றன

 மூன்று தலைமுறைக்கு பாதிப்பு தான்

பித்ரு தோஷங்கள் குறைந்தது மூன்ற தலைமுறைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வலிமை கொண்டதாகும். பித்ரு தோஷங்களை போக்க வேண்டுமானால், அமாவாசை நாட்களில் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு பித்ருக்களுக்கு தர்ப்பணம் மற்றும் தான தர்மங்களை செய்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீரில் பிண்டம் கரைவது போல் கரைந்து விடும். மற்ற அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், தை அமாவாசை நாளிலாவது பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியமாகும்.

 தில ஹோமம்

மிகக் கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள், ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். திலா ஹோமம் வேதங்கள் நன்கு கற்றறிந்த வேத பண்டிதர்களால் மட்டுமே செய்ய முடியும். திலா ஹோமம் என்பது நெல்லும் எள்ளும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தமாகும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்றிரவு ராமேஸ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும். ஹோமம் முடிந்த உடனேயே நேராக வீட்டுக்கு செல்லக்கூடாது.

 மஹாவிஷ்ணுவின் அருளாசி

தில ஹோமம் செய்து முடித்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் சமயத்தில், அதற்கு நேர் மேலே வானில் கருட பகவான் வட்டமிடவேண்டும். அப்படி நடந்தால் தான், பித்ருக்கள் நம்முடைய தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வதோடு, மஹாவிஷ்ணுவும் நம்மை ஆசீர்வதிப்பதாக அர்த்தம். வைணவ மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள், ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணி கரையில் தில ஹோமம் செய்த பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும், மஹாவிஷ்ணுவின் அருளையும் பெறலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் நாம் செய்யும் எந்த விதமான பூஜையோ, தான தர்மமோ பலனளிக்காது. அது கடலில் கரைத்த பெருங்காயம் தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே இந்த தை அமாவாசை நாளில் தாய் தந்தையை இழந்த அனைவரும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் நல்லாசியை பெறுவது அவசியம்.

தை அமாவாசை பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா

அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.

கடவுளால் இந்த பூமியில் படைக்கப்பட்ட எந்த ஒரு ஆன்மாவுக்கும் அழிவு என்பதே கிடையாது. கடவுளின் அருளால் உருவாக்கப்பட்ட ஜீவராசிகளின் உடம்புக்குள் ஆன்மாவாக நுழைந்து, அந்த ஜீவராசியின் ஆயுள் முடிந்த உடன், வந்த வேலை முடிந்தது என்று நினைத்து, பிறகு வேறு ஒரு ஜீவராசியின் உடம்புக்குள் புகுந்து அந்த ஜீவராசியின் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப ஆட்டம் காட்டும். அது மண்புழுவாக இருந்தாலும் சரி அல்லது ஆறறிவு படைத்த மனிதனாக இருந்தாலும் சரி ஒரே அளவு கோல் தான்.

மற்ற ஜீவராசிகளைப் பற்றி மனிதனுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. ஆனால், மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான்.

பித்ரு லோகம்

ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.

 ரத்தத்தின் ரத்தங்கள்

பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.

 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

நாம் அழகாக பேணி காக்கும் நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளிதத பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம். அப்படி எல்லாம் முடியாது, அவர்கள் செய்த புண்ணியத்தை மட்டுமே நான் அனுபவிப்பேன் என்று ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பாவ புண்ணியம் என இரண்டையும் சேர்த்து தான் அனுபவிக்க வேண்டும்.

 ஆன்மாவை சாந்தப்படுத்தனும்

நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.

 தமிழர்களின் ஆவி வழிபாடு

நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது ஆவி வழிபாடு எனப்படும். ஆவி வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவி வழிபாடு என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், நம்முடைய முன்னோர்களின் ஆவியானது, மறுபிறப்பு எடுக்கும் வரையிலும் நம்முடைய நலனில் பெரிதும் அக்கரை கொண்டவையாகவே இருக்கும்.

 ஆவி ரூபத்தில் பித்ருக்கள்

நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். இப்படி, ஆவிகள் ரூபத்தில் உலவிடும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.

நீர் நிலைகளில் தங்கும் பித்ருக்கள்

நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள்.

பித்ருக்களின் சாபம்

அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம்

எனவே தான், நாம் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும்.

பித்ரு தோஷம் என்ன செய்யும்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகமே, பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்த பின்பு தான் தன்னுடைய வேலையை தொடங்கும். இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒன்பது ராசிகளும் உச்சம் பெற்று முதல்வராக ஆகும் ஜாதகமாக இருந்தாலும் கூட, அனைத்து ராசிகளும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். எனவே, பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அந்த தோஷத்தை போக்க வேண்டியது அவசியமாகும்.

பிதுர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை

ஒரு வருடத்தை இரண்டு பருவங்களாக நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தை தட்சிணாயன காலம் என்றும், தை முதல் ஆனி மதம் வரை உள்ள காலம் உத்தராயண காலம் என்றும் பிரித்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத அமாவாசை திதியையும், தட்சிணாயன கால தொடக்க மாதமான ஆடி மாத அமாவாசை திதியை பிதுர் வழிபாட்டிற்கு மிக உகந்த தினம் என சாஸ்திர நூல்கள் தெளிவாக கூறியுள்ளன.

 முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதிலும், சூரியன் தன்னுடைய வடதிசை பயணம் துவக்கும் உத்தராயண மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை திதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காரணம், அந்த நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் நாம் செய்யும் தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ரு லோகம் செல்லும் நாளாகும். தை அமாவாசை நாளில், கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரின் மிக முக்கிய ஆன்மீகக் கடமையாகும்.

 பிதுர் காரகன், மாத்ரு காரகன்

சூரியனை பூமியும், அதன் துணைக் கோளான சந்திரனும் சுற்றி வருகின்றன என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. தை மாத தொடக்கத்தில் மகர ராசியில் நுழையும் சூரியனும், பூமி மற்றும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் தினமே தை அமாவாசை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியன், ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். சந்திரன் நம்முடைய மனதுக்கு அதிபதியானவர். மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம் ஆகியவற்றை தரக்கூடியவர். இதனால் தான் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாத்ரு காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

பித்ருக்களின் நல்லாசி

சூரியனையும், சந்திரனையும் தந்தை தாயாக மதித்து வழிபடும் தெய்வங்களாக கருதி வழிபடுகின்றனர். இத்தனை பெருமைகளை உடைய சூரியன் மற்றும் சந்திரனை, தாய் தந்தையை இழந்த அனைவருமே, அமாவாசை திதியில் வழிபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். தை மாதத்தில் அம்பாளையும், முருகனையும் போற்றி வழிபடும் மாதமாக இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் நல்லாசியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.

 ஸ்ரீராமருக்கு சிவபெருமானின் அறிவுரை

நீத்தார் கடனை சரியாக முறையாக செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது பிண்டம் வைத்து வழிபடுவது போன்ற கடன்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என சாஸ்திரங்களும் ஜோதிட நூல்களும் தெரிவிக்கின்றன. இவ்வாறான கடன்களை முறையாக நிறைவேற்றி விட்டாலே போதும், நம்முடைய சந்ததிகளின் வாழ்க்கை வளம்பெற்று மென்மேலும் சிறக்கும். பித்ரு கடன்களை நிறைவேற்றினால் நன்மைகள் பெருகும் என்று சிவபெருமானே ஸ்ரீராமபிரானிடம் கூறியிருக்கிறார். சிவபெருமான் கூறியதைக் கேட்ட பின்பே, ஸ்ரீராமர் தன்னுடைய தந்தை தசரத சக்ரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

 பித்ருக்கள் பூலோகம் செல்ல அனுமதி

ஸ்ரீராமபிரான் பித்ரு கடனை பூர்த்தி செய்த உடனே, சிவபெருமான் ஸ்ரீராமபிரான் முன்பு தோன்றி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால், அனைத்து பாவங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நன்மைகளும் தேடி வரும் என புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசை திதியன்று, நமது பித்ருக்களை பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தருவார். எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர்களின் இல்லத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 மனம் குளிரும் பித்ருக்கள்

அப்போது, பித்ருக்கள் தங்களின் வாரிசுகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியுடனும் வருவார்கள். அதனால் தான் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதிலும் தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களின் மனம் குளிர்ந்து, நம்முடைய குடும்பத்தில் கெட்ட சம்பவங்கள் எதுவும் நிகழாமல் காப்பாற்றுவார்கள். தை அமாவாசை நாளில் நாம் பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்காமல் விட்டுவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வார்கள்.

தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்றுவரலாம்.

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும்விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா' என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும்விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

 

அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.

 இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்🌹

தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

சரி அமாவாசை விஷேஸம் என்ன,

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

 

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

 

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை