12 - 09 - 2008 முதல் 18 - 09 - 2008 முடிய
கணிதம்: ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி உஷா ரெங்கன், பாளை.
அருங்கலைகள் அறுபத்து நான்கில் ஜோதிடக் கலை ஓர் அற்புதக் கலை. தி நெல்லை டைம்ஸ் அக்கலையை தனக்கே உரிய பாணியில் அனைத்து வகை மக்களைக் கவரும் வகையில் வெகு அற்புதமாய் அலசி ஆராய்ந்து அளிக்கவுள்ள, ஆரோக்கிய வழி காட்டும் வார ராசி பலன்கள், ராசி பலன்கள் வரலாற்றில் ஓர் புரட்சியையும், ஒரு அறிய விழிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ளும் வகையில் வெகுவாய் ஆர்வத்துடன் கணித்துள்ளோம். பலனறிந்து பயன் பெற்றிடுக,
மேஷம்: துணிச்சல் மிகுந்த வாரம். உடல் எடை சற்றே கூடும். ஆகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வயது 40க்கு மேல் உள்ளவர்களுக்கு, இலேசான தலை சுற்றல் இருக்கும். பித்தம் தரும் வகையில் இரவில் முழிப்பதைத் தவிர்க்கவும். உணவில் எண்ணெய் குறைக்க நன்று. கழுத்து வலி கண்டால் கரு வேலம் பட்டைத் தைலம் நான்கு வேளை தடவ குணமாகும். மாணவர்கள் அரையாண்டுத் தேர்விற்கு அதிகாலையில் எழுந்து படிக்க நன்று.
ரிஷபம்: கால் வலி சற்று கண்டு பின் சரியாகும். அதிகாலையில் சதைப்பிடிப்பு வருமாயின் பிண்டத் தைலம் தடவி வெந்நீர் ஒத்தடம் நன்று. பெண் குழந்தைகளுக்கு, சிறு வயிற்று வலி வந்து பின் குணமாகும். உடல் நன்றாக இருப்பினும் இந்த வாரம் மனதில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாததனால், சிறு சிறு கவலைகளும், கண்ணீர் வடிக்கும் நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது 45 ஐ தாண்டியவர்கள் காலை வாக்கிங் பிராக்டீஸ் நேரத்தை மேலும் சிறிதளவு கூட்டிக் கொள்ள உத்தமம்.
மிதுனம்: வயது 45க்கு மேல் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க நல்லது. அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உறுப்பினர் அடடையைப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உத்தமம். ஏனெனில் அடுத்த இரு தினங்களில் நான்காமிடத்தில் உள்ள கிரகக் கூட்டு நிமித்தம் உஷ்ணம் சார்ந்த ஓர் பிரச்சனை சந்திக்க நேரலாம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் கடுப்பு அல்லது கல்லடைப்பு போன்று குணங்கள் இருப்பின் நீர் முள்ளி குடிநீர் மற்றும், கண்ணுப்பிள்ளை செடியின் பாகங்கள் வேகவைத்த குடிநீர் அருந்த உத்தமம்.
கடகம்: தனக்கு உடல்நிலை மன நிலை சிறப்பாக உள்ளதாக கருத வேண்டாம். சந்திர அஷ்டம தினங்கள் முதல் மூன்று நாட்கள் உள்ளது. வீட்டில் பிறர் ஒருவருக்கு வருகின்ற காய்ச்சல் அல்லது கண்ணீர் வடிதல் போன்ற குணங்கள் காணப்படலாம். ஒரு முறை இஞ்சி சாறு தேனுடன் கலந்து இந்த வாரம் அருந்த உத்தமம். அதன் காரணமாக வயிற்று உப்பிசம் மற்றும் தேவையல்லாத தொந்தியைக் குறைக்க தற்போதே நடவடிக்கை மேற்கொண்டு, ஆறு மாதத்தில் மாற்றம் காணலாம். ஒபிசிடி என்னும் தேவையற்ற வயிற்றுச் சதையைக் குறைக்கும் வழியைப் பெண்கள் யோகா மூலம் கடைபிடிக்க உத்தமம்
சிம்மம்: சூப்பர் வாரம் கழிந்து சுமார் வாரம். ஆவணி மாதம் !ஞாயிற்றுக் கிழமை என்பதால், அசைவ உணவு தவிர்த்து, அன்று எளிமையான உணவுகளுடன், மாலையில் சிவன் கோவில் தரிசனம் மேற்கொண்டால், எத்தகைய விதத்தில் தேர்வு பயத்தில் உள்ள மாணவ- மாணவியர்களும் தக்க நம்பிக்கை கொள்வர். அரசியல் வாதிகள் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க தக்க தருணம் என அறிந்தால், அத்தகு உயர்விற்கு உடல் நலமும் தேவை என அறிந்து தக்க உணவு வகைகைளை மேற் கொள்ள உத்தமம்.
கன்னி: நான்காமிடத்தில் உள்ள குரு நாற்திசையும் புகழ் பரப்பு என்பதில் ஐயமி;லலை. ஆரோக்கியம் கூட நல்ல முன்னேற்றம் தான். ஆனால் ஏழரைச் சனி தன் பங்குக்கு, ஒரே ஒரு முறை அரை நாளுக்கு தலைவலி கொடுத்து விட்டுத் தான் செல்லும். வயது 50க்கு மேல் உள்ளவர்களுக்கு, தனிப்பட்ட குறிப்பு என்ன வென்றால், இரத்த சிவப்பணுக்கள் சராசரி அளவிற்கு உள்ளவனவா என் அறிந்து கொள்ளவதுடன், பழைய முறையில் உள்ளவாறு அடிக்கடி வெற்றிலை; போடுதல் மற்றும் இரவில் கண் விழத்தல் குறைக்க உத்தமம்;. பாசிப்பயறு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் நினைவாற்றல் கூடும். பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக்கு இது நல்ல பலன் தரும்
துலாம்: தங்கம் வாங்கிய சந்தோஷம் இந்த வாரம் ஒரு சிலருக்கு இருக்கலாம். ஆனால் சந்தோஷம் வரும் பலருக்கு திடீரென கால்களில் சுளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ராசிநாதன் சுக்கிரன் நிலையைப் பார்த்தால் பணம் கரையும் வாரம் என்று சொல்லலாம். எனவே அடுத்த வாரத்துவக்கம் வரை மனதளவில் தனக்குத் தானே தைர்யத்தை கூட்டிக் கொள்ள உத்ததமம். 18ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு மேற்கொள்ள உத்தமம்.
விருச்சிகம்: செவ்வாயின் தன்மை இந்த வாரம் நன்மையாக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் காணும். விருச்சிக ராசி மகளிர் மகப்பேறு எனில் சிறப்பாக சுகப்பிரசவம் காணுவர். விக்கல் ஒரு சிலருக்கு பிரச்சனையாகும் அளவிற்கு அடிக்கடி தோன்றலாம். மயிலிறகாதி சூரணம் நல்ல பலன் தரும். வாக்கில் குரு உள்ளதால், பெற்றோர்களின் வாழ்த்தும் குரு வின் தரிசனமும் கிடைக்கும் வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள நல்லது.
தனுசு: சென்;ற வாரப் பயணக் களைப்பு உடல் அசதி மட்டுமல்ல, ஒரு சில அல்ர்ஜி ஒரு சிலருக்கு ஏற்படலாம். சளி சம்பந்தமான அலர்ஜி எனில் முதலில் கஸ்தூரி மாத்திரை அல்லது தரளி;சாதி வடகம் பயன்படுத்த நல்லது. ஈசினோபிலைக் குறைக்கும் சுண்டவற்றல் ஒரு உணவில் சிறிதளவு ஒரு வாரத்திற்கு சேர்க்க நல்ல பலன் கிடைக்கும். தன்னிலும் வயதில் குறைந்த தம்பி தங்கைகளுக்கு தேர்வுக்குரிய எழுது பொருட்களை வழங்கி மகிழ்ச்சி கொள்ள நல்லது. தன்னை நாடி வீட்டிற்கு வரும் பெரியோர்களுக்கு உணவளித்து உபசரித்தால் அதன் மூலம் பெரியதொரு ஆலோசனையும் தன் குடும்பத்திற்கு மேனமையும் எதிர்பார்க்கலாம்.
மகரம்: கால் வலி என்று கதறுகின்ற வயதான மகர ராசி அன்பர்களுக்கு, தான்வந்தர குழம்பும், காயத்திருமேனி தைலமும் தான் மருந்தாகும். குழந்தைகள் மகர ராசி எனில் காலையில் எழுந்து கல்வி பயில இந்த வாரம் மிகச் சிறந்தது. கடந்த காலாண்டுகாலம் பயின்ற கல்விக்குரிய தேர்வு வருகிறது என்பதால் உற்சாகம் கூடும். மிதிவண்டியில் பிரயாணம் செய்யும் மகர ராசிக்காரர்கள் பொறுப்பாகச் சென்று வர நல்லது.
கும்பம்: சோம்பல் குணம் கூடிக் கொண்டே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை நாளை என அனைத்தையுமே தள்ளிப் போட்டு விட்டு, செலவுகள் மற்றும் உணவுகளை விரும்பி உண்ணும் செலவுகள் மட்டும் உடனுக்குடன் மேற்கொள்ளும் படியாக ஒரு சிலருக்கு பணம் காலியாகலாம். கவலை வேண்டாம். இந்த வாரத்தில், ஒரு புதிய உத்தரவு மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். தினமும் காலையில் வாக்கிங் பயிற்சி நல்லது.
மீனம்: நண்பர்களால் மகிழ்ச்சி தான் என்றிருந்தது மாறி வருத்தம் வரும் வாய்ப்பு உள்ளது. வாயை அடக்கிக் கொள்வது நல்லது. பார்க்கும் பணியில் வந்துள்ள குழப்பத்தால், தூக்கம் கெட்டு அவஸ்தைப் பட்டால், இரவில் தூங்கும் முன்பாக ஒரு கால் மணி நேரம் நன்றாக தியானம் செய்து விட்டு, இளம் சூட்டுடன் கூடிய நீரில் தேன் கலந்து உண்பது நல்லது. உடல், நடை சோர்வு காணப்பட்டால் சியவனப்பிரசா லேகியம் பயன்படுத்தலாம். வரும் வாரத்தில் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
குறிப்பு: சித்த வைத்திய குறிப்புக்களை ஜாதக பலனுடன் இணைத்துள்ள இந்த புதுமைக்கு தங்களின் வரவேற்பு மற்றும் ஆலோசனைகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறோம். அக்கருத்துக்களின் அடிப்படையில் வரும் வாரங்களில், மேம்பட்ட பலன் தரத்தக்க வகையில் கருத்துப் பெட்டமாக இப்பகுதி அமைத்துத் தர உதவிட வேண்டுகிறோம். தொடர்புக்கு: சித்த மருத்துவம் இறுதி ஆண்டு மாணவி: ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனைக் குழு,
27 சிவன் மேலரத வீதி, பாளை: 9442586300, 2586300 சுபம்.
அனைவருக்கும் வணக்கம். இந்த சர்வதாரி ஆண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவனின் பொற்பாதக்கமலங்களை பணிந்து வணங்கி எதிர் கால நலனுக்காக பிரார்த்திப்போமாக.
REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,
சமீப காலமாக நாங்கள் அதிகம் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் ஒரு தகவல் என்னவென்றால், டிப்ரசன் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு புதிதுபுதிதாய் பலர் உள்ளாகிறார்கள். அவர்களை எவ்வாறு நாம் காப்பாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வருவது என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை காண்போமா.
இது எதற்குச் சமம் என்றால்-முதலை வாயில் அகப்பட்ட யானையினை உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது தண்ணீரில் முதலைக்கு பலம் அதிகம், தரையில் யானைக்கு பலம் அதிகம், இஙகே தண்ணீர் அருந்தச் சென்ற யானை முதலை வாயிற் அகப்பட்டது போல் மனிதர்கள் தம் உடம்பில் உள்ள Heart, Lungs, Brain, Kidneys, Spinal cord போன்ற அவசிய உறுப்புகள் மிகச் சரியாக உள்ள போதும்-மனம் எனும் உறுப்பு தனது நிலைப்பாட்டிலிருந்து தவறி-ஒரு சோக வலைக்குள் இணைந்து-மனச்சோர்வு எனும் கொடிய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரும் stress, Depression, tiredness போன்ற மன வியாதிகளிலிருந்து விடுபட நாம் தினமும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கி உரிய பரிகாரங்கள் இவிடம் செய்து பலன் பெறுவோமாக,
தயவு செய்து ஒவ்வொருவரும் மற்றவர் கவலையிலிருந்து விடுபட உதவுஙகள். நமது உதவிகள் அப்படியே பன்மடங்காகி நம் குழந்தைகளுக்கு பலன் திருப்பிவிட, அதனின் நற்பலன்கள் நம் குழந்தைகள் அனுபவிக்கட்டுமே. சுபம்.
இவண்
ஜோதிட தம்பதி.
எவ்விதத்திலும் புகையிலை கெடுதல் தான் செய்யும். அது தாம்பூலமானாலும் சரி ஸ்டைலாகப் பயன்படுத்தும் சிகரெட் முதல் முளை சுறுசுறுப்பாக்கும் எனத் தவறாக கருதும் அளவிற்கு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பயன்படுத்தி வருவதற்கு ஒரு முகாந்திரம் இருக்குமா என்ன?
இயற்கை வைத்திய சிகிட்சை முறைகளிலும், உபவாச முறைகளிலும் நீராவிக் குளியல், வெந்நீர்க் குளியல், தண்ணீர்க் குளியல், போன்றவைகள் இம்முறை வைத்தியத்திற்கு பெரிதும் உதவியாக உளள்து. புகையை மறகக்வும், போதைப் பழக்கங்கள் மாறவும் எளிய பரிகாரங்களுக்கு தொடர்பு கொண்டு உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாத்து நீணட நாள் வாழ்ந்து நாமும் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் மிளிர்வோமாக. சுபம்,

சிறப்புச் செய்திகள்:
விருதுச் செம்மல் " M. VIJAYAN " , செயலாளர், தமிழ்நாடு சினிமா கலை மன்றம் அவர்களின் நன் முயற்சிக்கு பாராட்டு!!.
சென்னையிலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து, தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பாக கடந்த 30-03-2008 அன்று மாலை குயில் இசை வாணி உலக பிரசித்தி பெற்ற திரைப்பட பின்னணி பாடகி மற்றும் அம்மன் வழிபாட்டு தனிப் பாடல்கள் பாடிய பாடகி செல்வி. L.R.ஈஸ்வரி அவர்கள் தலைமை தாங்க, நீதியரசர் திரு P. பாஸ்கரன் M.A.B.L., (Chairman, Loss of Ecology (P&PC) Authority, Tamil Nadu அவர்கள் விருதுகளை வழங்க, சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட மற்றும் T.V. நடிகை செல்வி "கலைநிலா" நீலிமா ராணி கலந்து கொள்ள, சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மனை மங்கலச் செல்வர் திரு M. ஆறுமுகம் அவர்கள் பரிசுகளை வழங்க, திரைப்பட முன்னணி நடிகர் திரு சந்திரசேகர், காத்தாடி ராமுர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பல்வேறு கலைத் துறைகளைச் சார்ந்த சாதனை படைத்த சித்த மருத்துவர்கள்-சிறந்த கல்வி நிறுவனங்கள்-தலைமையாசிரியர்கள்-கணிணி மைய பயிற்றுநர்கள்-சமுக சேவையாளர்கள்-கவிஞர்கள்-கதாசிரியர்கள்-பின்னணி நடிகர்-நடிகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், சிறந்த ஜோதிடதம்பதி மற்றும் ஜோதிட ஆய்வகத்திற்கான விருது பாளையங்கோட்டை சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிட தம்பதி திரு & திருமதி நா. ரெங்கன் - அ. உஷா ரெங்கன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஜோதிடத் தம்பதியரை பொதுமக்களுடன் வாடிக்கையாளர்கள் பாரட்டினர். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் பாராட்ட அனைவருக்கும் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் நன்றி கூறினார்.



