தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும்,  வருகைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிற ஆன்மீகப் பற்றுள்ள அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள்..
வருகிற 26-07-2013 வெள்ளி முதல் 28-07-2013 ஞாயிறு வரை 3 தினங்கள் ஜோதிடத் தம்பதி சென்னை வருகை..
சந்திக்க வேண்டுமெனில் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசிகளில் தங்கள் வருகையை உறுதி செய்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிடத் தம்பதி
ரங்கன் நாராயணய்யர்
உஷா ரங்கன்
MOBILE NO.9443423897
9442586300

அன்புடையீர்,
வணக்கம்.  வருகிற 5,6, மற்றும் 7 ஜூலை 2013 நாட்களில், வீரவநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) வரலாற்றில் முக்கியத்துவம் பதிக்கும் சிறப்பம்சமாக நடைபெறவுள்ள பஜன் மேளாவில் கலந்து கொண்டு, ஸ்ரீ ரெங்கநாதர் திருவருளைப் பெற அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி மற்றும் விழா குறித்த சிறப்பம்சங்களை இணைத்துள்ள விழா மடலில் கண்டு கொள்ளவும்.. வருக.. வருக.. வளம் பெற வருகை தருக!!.. நன்றி.
ஜோதிடதம்பதி
ரெங்கன் உஷா.
விழாமலர் கட்டுரையில் ஒன்று!.

பாவங்களைக் களைய பகவானின் நாமமே கதி!
வீரவநல்லூர் மரீசி ரிஷி கோத்திரம் ஸ்ரீ நாராயணய்யர்-ஸ்ரீமதி விசாலட்சி புத்திரன்
ஜோதிடத் தம்பதி ரெங்கன், MA.B.ED., D.ASTRO., தமிழாசிரியர் - உஷா ரெங்கன் B.A. ASTRO.,

பஜன் சம்பிரதாயம் உலகத்தில் எப்படி தோன்றியது!?.. எதற்காகத் தோன்றியது!.. என்று ஆராய முற்படுவோமா!!.  பகவானைத் துதித்து நிற்பதிலே முதன்மை பெறுவது ஏன் பகவானை விட பெரியது அவன் நாமம் உச்சரிப்பது தானே.  எந்த நாமத்தை எந்த அடியார்கள் உச்சரிக்கிறார்களோ அவர்கள் அந்த பகவானை விடப் பன்மடங்கு பெரியவர்கள் என்று பகவானே ஒப்புக்கொண்டுள்ள வரலாறுகள் எத்தனை, எத்தனை!.

       ஞான மார்க்கத்தை விட உயர்ந்த்தும் பல படிகள் எளியதுமாக இருப்பது பகவானின் நாமத்தை சதா உச்சரித்துக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கம் தான்! இதன்கண் பஜன் சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கிறதாக ஆன்றோர்கள் சுட்டிக் காட்டி பஜன் தொடர மார்க்கங்கள் பல தந்துள்ளனர்.
       துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என பகவானின் நாமத்தைப் பாடிப் பாடி ஆனந்தமயமாய் திகழந்தவர்கள் பலராவார்.  நாம சங்கீர்த்தன மகிமையை பக்தர்கள் பெருமையைக் கூறும் சம்பவங்கள் பலவுண்டு!.

       புண்டலிகன் எனும் பக்தன் தன் தாய் தந்தையருக்குச் சேவை செய்வதில் சிறந்த விளங்குகிறான்.  அதன் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு ஆதரவளித்து வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.  அச்சமயம் தனது தாயின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டு சேவை செய்கிறான் புண்டலிகன்.  ஆகவே தன்னைக் காண வந்தவர் சுவாமி ஷ ஸ்ரீ பாண்டுரங்கனே என்பதையும் அறியாது, செங்கலின் மீது சற்று நேரம் நிற்குமாறு பணிக்கிறான்.  இறைவனும் அதை ஏற்று, அவ்வாறே செங்கலின் மீது ஏறி, நின்று “விட்டலன்ஆன பெருமை விவரிக்க வார்த்தைகளே இல்லையே!..

       இப்போது பக்தன் பெருமைக்குரியவனா? அல்லது அந்த பக்தனுக்காக அவன் வரும் வரை தனது மனைவியோடு இடுப்பில் கைவைத்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டரிபுர நாயகன் பெருமைக்குரியவரா?
       உண்மையான ஒரு பக்தனைப் பெருமைப் படுத்த இறைவன் தான் எந்த அளவிற்கு இறங்கி வரத் தயாராக இருக்கிறார் என்பதைத் தான் இச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. மேலும் இன்னொன்று...

திரௌபதை மீது  கிருஷ்ணனுக்கு, அதிகமான அன்பு எப்படி என்பதை அறிய ருக்மணியும், சத்யபாமாவும், ஆவல் கொள்கின்ற நேரம். ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.  அந்நேரம், அங்கே அரண்மனையில், திரௌபதி தலைவராமல், கலைந்த கூந்தலுடன் அமர்ந்திருக்கிறாள்.  விருந்தினரை வரவேற்று உபசரித்த அவள், பின் தன் தலையை வாரிவிடும்படி, ருக்மணியிடம் வேண்டிக் கொள்கிறாள். ருக்மணியும், அன்புடனே திரௌபதையின் தலையை வார முற்படுகிறாள்.  அவள் வார வார சீப்பானது துடிக்கின்றது.  ஏன் என அறிய முற்பட்டால், திரௌபதியின் ஒவ்வொரு தலைமுடியும் கிருஷ்ணரின் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது.  அதைக் க்ணட இருவருக்கும், கிருஷ்ணருக்கு திரௌபதையின் மீது இருக்கும் அன்பிற்கான உண்மைக் காரணம் புரிகிறது.  பாலகிருஷ்ணன் நாம மகிமையால் முடியாத்தேது?  ராம நாம மகிமையால் அன்றோ ஆஞ்சநேயர் பெரும் கடலைத் தாண்ட முடிந்த்தே!..





பகவானின் நாமங்களைச் சொல்வோம்!.. பாவங்களை அம்மட்டும் களைவோம்!!. சுபம்.

அன்புடையீர்,

வணக்கம்.   சென்னை முகாம்  

இம்மாதம் ஜோதிடத்தம்பதி இன்றும் நாளையும்

அதாவது  20-05-2013 முதல் 21-05-2013 

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய   நாட்களில் 

சென்னையில் இருக்கும் நாட்களில் 9443423897

என்ற எண்ணிலும், தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வர பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிட தம்பதி

அன்புடையீர், வணக்கம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.. தமிழ்ப் புத்தாண்டு  விஜய வருட ராசி பலன்கள் அறிவோமா..  The Fortune Prediction for 12 Rasi for Tamil New Year VIJAYA year.

வருகின்ற தமிழ் புத்தாண்டாம் விஜய வருடப் பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிக்காரர்களுக்கும் பதில் அளிக்கும் படியாக பல்வேறு பன்னாட்டு வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.  அவர்களின் அன்பான வேண்டுதல்களுக்கிணங்கி, விரைவில் 12 ராசிகளுக்கும், விஜய வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தரவுள்ளோம் என்ற மகிழ்வான செய்தியைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம். நன்றி
ஜோதிடத் தம்பதி
நா. ரெங்கன்
உஷா ரெங்கன்.


9443423897

9442586300

அன்புடையீர்,
வணக்கம்.
இம்மாதம் ஜோதிடத்தம்பதி வருகின்ற 15-03-2013 முதல் 21-03-2013 வரையுள்ள நாட்களில் சென்னை வருகை. 
சென்னையில் இருக்கும் நாட்களில் 9443423897 என்ற எண்ணிலும், 9442586300 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வர பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி.
குறிப்பு.  சென்ற முறை வருகையின்போது, சந்திக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் வரிசையில் தொடர்ந்து, வரிசையாக தங்கள் பெயர் இடம் பெற இப்போதே, சந்திப்பை உறுதி செய்து கொண்டு நேரில் காண வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிட தம்பதி

அன்புடையீர்,
வணக்கம்.
இது கலிகாலம்.. இப்படித் தான் பொய்யும் புரட்டும் நிரம்ப இருக்கும்.. என்று ஒருவர்க்கொருவர் அநீதிகளை நியாப்படுத்தும் காலமாக மாறிவருகின்ற இந்த காலத்தே, நாமும், நம்மைச் சார்ந்த குடும்பம் மற்றும் குழந்தைகளும் 
எப்படி இருப்பது நல்லது என்று நம்மைச் சார்ந்த விவரங்களை நாம் நன்றாக
மெருகேற்றி சிந்தனையில், பதியவைத்துக் கொள்வது தான் சிறந்ததாகக்
கருத முடிகிறது.
அந்த வகையில் வளமான வாழ்க்கைக்கு வளமூட்டும் விந்தைகளாக இனி
ஒவ்வொரு வாரமும், முடிந்த அளவு வார இறுதி நாட்களில் அனுபவங்களை
யும், அந்தக் காலம், இந்தக்காலம் எதிர்காலம் என்று எந்தக் காலத்திற்கும்
பொருந்துவதான விவரங்களை நாம் அலசி ஆராய்ந்து, குடும்பம், கணவன்,
மனைவி, குழந்தைகள் - நமக்குக் கிடைத்துள்ள புதிய உறவுகள் மருமகன்,
மருமகள், பேரன் பேத்தி மற்றும் மிக நெருக்கமான உறவுகளின் மனம்
சார்ந்த கருத்துக்களை நாம் பதிவு செய்து,
எதிர்காலத்தை வளமாக்க வழிவகுப்போமாக..

அன்பு தரும் அருமைச் சிந்தனைகள்
1.
திருமணமென்றாகி விட்டது. குழந்தைகள் கிடைத்து விட்டது.  இனி நமது சிந்தனை என்  கணவர்  அல்லது என் மனைவி - குழந்தைகள் அவர்தம் 
எதிர்காலம் சிறக்க நாம் எப்படியெல்லாம் நாம் மனதை வளப்படுத்தலாம்
எப்படியெல்லாம் மனதை விஷ அலைகளிலிருந்து தப்பாமல், காக்கலாம என்ற சிந்தனைகள் வளர்த்துக் கொள்வது தான் மிகச் சிறந்த வழி யென்று
ஆன்றோர்களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அந்த வகையில் தொடரும் சிந்தனைகளாக...

இந்த வகையில் தான் நமது சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து, நமக்கென என்னென்ன, வாழ்க்கை விதிமுறைகள் உள்ளன.. அவைகளை எப்படி அறிந்து கொள்வது என தீர்க்கமான தம்பதியர் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு மிகமுக்கியமான அர்த்தங்கள் பல நேரம் புரிவதில்லை. உடன் பணியாற்றும், பழகுகின்ற நண்பர்கள், சொந்த பந்தங்கள் பலர் வீடு வாங்குகின்றனர்.. பலர் நிலம் வாங்குகின்றனர்... ஒரு சிலர் தங்க நகைகளாக வாங்கி குவிக்கின்றனர்.. நமக்கு பணமா இல்லை... வருகிறது.. ஆனால் நாம் ஏன் அந்த வழியில் முதலீடு செய்ய இயலாமல் உள்ளோம்.. என்ற சிந்தனை அடிக்கடி வந்து அந்த சிந்தனைகளே கவலைகளாக மாறி மனதை இன்னலுக்காக்கி, வாழ்க்கையில் புரியாத பல சோகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை பலரது வாழ்க்கையில் நடக்கத் தான் செய்கின்றன.  நல்ல திடகாத்திரமான திரேகம், தெளிவான சிந்தனை, பிறரைப் போற்றும் பண்பு என எல்லாவற்றிலும் முழுமைபெருகின்ற ஒருவர் தான் திருப்தி அடையத்தக்கவாறு, மனைகள், வீடுகள், நிலபுலன்கள், வாகனங்கள் மற்றும இத்தியாதி இத்தியாதிகள் வாங்கிக் குவிக்க இயலவில்லேயே.. அனைவரும் கடன் வாங்கியாவது வாங்கிக் குவிக்கின்றனரே.. என பலநேரம் மனம் அசை போடுவது உண்டு தானே..
இது போன்ற விவரங்களுக்கு, நாம் முதலில் நமது பிறந்த நேரம் பிறந்த நாள் பிறந்த இடம் ஆகியவை துல்லியமாக அறிந்து கொண்டு, உரிய ஜாதகம் பெற வேண்டும்.
அந்த ஜாதக அடிப்படையில், பன்னிரண்டு பாவங்களால், அறிய வேண்டுவனவாகிய, உரிய,  கோள், பாவம், காரகக்கோள், ஆகியவை ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம்,  பெற்று இருந்தும். நற்கோள் சேர்க்கை பெற்றும், பார்த்தாலும் நற்பலன்கள் உண்டாகும்.   இப்பாவத்து அதிபதியும், காரகக்கோளும், இணைந்து மேற்படி, இலக்கினத்தில் இருந்தாலும், இணைந்து அப்பாவத்திலேயே இருந்தாலும் நற்பலன்கள் உண்டு. ஆனால், நற்பலனுக்கு நேர் மாறாக, விதி வசப்படி, கெடுபலன்களையே அனுபவிக்க வேண்டும் என்றிருந்தால், அந்த உரிய பாவத்திற்குரிய கோள், மற்றும் பாவம், காரகக்கோள் ஆகியவை, பகை, நீசம், மூடம் பெற்றாலம், 6-8-12 களில் நின்றாலும், தீய கோள்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும், தீய பலன்கள் என்றறிக.
தொடரும்.....

மகாலட்சுமி அருள் வேண்டுமா

ஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி!..
மஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..
முதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா!..
இதோ பட்டியலிடுகிறோம்..
அவரவர் வலது உள்ளங்கை
கண்ணாடி
தீபம்
பசு
யானை
விளக்கு
மாவிலை
தோரணம்
வெற்றிலை
சந்தனம்
கோலங்கள்
திருமண் மற்றும் சூர்ணம்
குங்குமம்
மஞ்கள்
பூரண கும்பம்
வில்வ மரம்
நெல்லி மரம்
மஞ்சள் செடி
துளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது
வில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.
வில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள்.  ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.
நெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம்.  நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள்  செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.
இன்று 27-07-2012  வரலட்சுமி விரதம். 
எப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது
காலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசிமாக் கோலம் இடவேண்டும்.  பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும்.  குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.
வீட்டில் ஒற்றுமை மேலோங்க …
மாங்கல்ய பாக்கியம் நிலைக்க…
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற..
செல்வ வளம் பெருக..
திருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய
சகல ஐசுவரியங்களுக்கும்
மகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.
நாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன். 

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை