பிரிந்த குடும்பங்கள், உறவுகள், நட்புகள், பாசத்துடனும் அன்புடனும் ஒன்று சேர்க்கவும், பல்லாண்டு பகையை எளிதில் மறக்கவும், என பல சாதனைகளை படைத்து வரும் பாளை மார்க்கெட் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, சமீப காலமாக உறவுகளிடையே பலர் வாழ்க்கையில் முக்கியமாக கணவன், மனைவி, பெற்றோர் குழந்தைகள், அண்டை அயலார், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர் ஆகியோர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் நிமித்தம் பனிப்போர் தொடர்ந்து இனிக்க - இனிக்க வழிநடக்க வேண்டிய வாழ்க்கையில் இனம் புரியாத கசப்பு உணர்வுகள் ஆரம்பித்து காலப் போக்கில் அது வெறுப்பாகவும், பகையாகவும் மாறி அர்த்தமில்லாத வாழ்க்கையாக்கி, பிறப்பின் ரகசியமாம் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைமாறி, ஏனோ பிறந்தோம் - வளர்ந்தோம் - என எதையும் சாதிக்க இயலாமல் ஆகி விடுகிறது.
இம்மாதிரியான மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் மனக்கசப்பு எதனால் ஏற்படுகிறது என அறிய முற்பட்டோமானால் அதற்குரிய பல காரணங்களில் முக்கியமானதாக மற்றவரைப் பார்த்து, ‘நாமும் அவரைப்போல் இல்லையே” என்ற ஆதங்கம் தான் முதல் காரணமாகி விடுகிறது. (ஜாதக ரீதியில் குரு, கேது, புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் ஆதிபத்திய நிலை)
ஓரே வீட்டில், தம்பியைப் போல், தங்கையைப் போல் நம்மிடம் பெற்றோர் பாசம் காண்பிக்கவில்லையே என்ற தேவையில்லா சந்தேகம் கொள்ளும் மூத்த குழந்தைகளும், அக்காவைப் போல் தனக்கு திருமணம் நடத்தவில்லை, சீர்கள் செய்ய வில்லை ஆகியவை போன்று குறைபடும் மற்ற சகோதரிகளும், தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லையோ என தனக்குத் தானே குறைபட்டுக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மைகளும், கணவன் மனைவிகளுக்குள் தேவையற்ற தாம்பத்திய சந்தேகங்களும், குறிப்பாக கல்வியில் ஒன்றாகப் பயின்ற மாணவ மாணவியருக்குள், அவருக்கு நிகராகத் தனக்குப் பணி, திருமண வாய்ப்புகள், இல்லையே என்றும், இந்நாளில் ஏதோ ஒரு நேரத்தில், ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் கிடைத்த சிறு உதாரணங்களைக் காரண காரியமாகக் காட்டி இப்படித் தான் நடக்கிறது, என்னைத் தான் எவரும் போற்றுவதில்லை, என்னை தாழ்த்தத் தான் உறவுகள், சொந்தங்கள், அக்கம் பக்கத்தார் உள்ளனர் எனத் தனக்குத் தானே நாள்தோறும் தூக்கமில்லாமல், அதையே எண்ணி, நாளடைவில், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, கடைசியில், சைக்கோஜெனிக் சிம்ப்டம்ப்ஸ் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகி, கல்வியில், பணியில், பிறரிடம் பேசி மகிழ்வதில், நட்பு பாராட்டுவதில், மங்கல குதூகல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், சகஜமாக வெளியில் சென்று அன்றாட வாழ்க்கையில் சராசரியாக கலந்து கொள்வதில் இருந்து விலகி, தனிமையாக தனக்குத் தானே ஒரு சோக வளையத்தை ஏற்படுத்தி கடைசியில் வாழ்க்கையில் வெறுப்பைச் சந்திக்கின்ற அளவில் சோகமாகிவிடும் ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் என்னும் மாயை நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ ஏற்பட்டு, டிப்ரசன் எனும் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டு நாம் அதை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நம்மில் பலருக்கு வந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட மிகச் சிறந்த வழியாக தியானம் , யோகா இவற்றுடன் மனச்சோர்வை நீக்கும் தகுந்த இசைப் பாடல்களும் நல்ல பலன் தருகின்றன. உதாரணமாக, திருமண வீடுகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திருவிழாக்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்கின்ற தனி உற்சாகமும் தான். எப்படி? நம் உறவுகளையும், சொந்த பந்தங்களையும் பார்க்கிறோம், அது மட்டுமா.. .. இசையை நுகர்கிறோம்.. .. யாரோ யாருக்கோ செய்கின்ற திருமணம், சடங்கு என்றில்லாமல் நாமும் கலந்து கொண்டோம், நம்மாலும் சர்வ சாதராணமாக ஜன ரஞ்சகமான இடங்களில் தெளிவாக நடந்து கொள்ளமுடிகிறது என்ற தன்னம்பிக்கை கிடைக்கின்றதல்லவா.. இப்படியே சொல்லிக் கொண்டே செல்லலாம். மொத்தத்தில் நமக்கு வேண்டிய மூல மந்திரம் “ மனோதிடமும் முகமலர்ச்சியும்” இருந்து விட்டால் எல்லோரும் இந்நாட்டில் உயர்வுதனைப் பெற்றிடலாம். ஜாதக ரீதியில் வரும் பங்குனி உத்திரத்தன்று குல தெய்வமாம் சாஸ்தாவை வழிபடுதலாலும் இத்தகு மனோ பலமும், முகமலர்ச்சியும் நாம் அடைய முடியம் என்பது சான்றோர்களின் நம்பிக்கை. சுபம்.
மேலும் விவரமறிய: 9442586300
iTheme Techno Blogger by MagzNetwork and BlackQuanta. Theme & Icons by N.Design Studio
Customised by Dr.Bruno
Customised by Dr.Bruno
Post a Comment
You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in
For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.
ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்