தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்











 இந்தியாவில் தசரா திருவிழா..... 

(ஜோதிட தம்பதி  நா. ரெங்கன், உஷா 

சுவாதி ஜோதிட ஆலயம், வீரவநல்லூர் மற்றும்  பாளையங்கோட்டை - 9443423897).

அனைவருக்கும் 2021 தசரா நல்வாழ்த்துக்கள்..

இந்த 2021 ஆம் ஆண்டு, பிலவ வருட புரட்டாசி மாதம் 20ம் நாள் (06-10-2021) புதன் கிழமை துவங்குகிறது.  நவராத்திரி விழா மிகச் சிறப்பு வாய்ந்த பக்திநெறி கூட்டும் அம்மன் அருள் பெறும் அற்புத விழாவாகும்.  தென் இந்தியாவில் துர்கா, லட்சுமி, ரஸ்வதியின் பூஜை நடக்க, பொம்மைகள் கொலுப்படிகளில் அலங்கரிக்க, சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்க விழா விஜய தசமியுடன் முடிகிறது. இப்போது வட நாட்டில் இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். 
மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள். அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர். 
புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா தொடங்குகிறது. இமயம் முதல் குமரிவரை நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகாவில் தசரா பண்டிகை என்றும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவி்ல் 10 ஆவது நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. அம்பாளை ஆராதிக்கும் நவராத்திரியில் அம்பாளுக்கு 10 திருநாமங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தியைத் தரக்கூடியவை.அன்னை பராசக்தி, நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, சாமுண்டி என்ற நவஸ்வரூபங்களாக விளங்கி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காப்பாற்ற சக்தி அவதரித்து அவனை அழித்தாள். அதன் நினைவாகவே தேவியின் பாதங்களை வணங்கி வரம் கோருவதையே நவராத்திரி தினங்கள் குறிக்கின்றன.இந்த 9 நாட்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என, தேவியை முதல் 3 நாட்கள் வெற்றியை வேண்டி அம்பாளை மகா துர்காவாகவும், அடுத்த 3 நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் கல்வியை வேண்டி மகா சரஸ்வதியாகவும் அம்பாளுக்கு அலங்காரம் செய்து  நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது .நவராத்திரி விழாவை யொட்டி வீடுகளில் பெண்கள் விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு வைப்பார்கள். கொலு வைப்பது  என்பது இறைவியின் விசுவரூபத்தைக் குறிப்பதாகும்.நவராத்திரி கொண்டாடுமிடத்தில், கொலுவைக்கும் இடத்தில் கும்ப பூஜையும் நடத்தப்படுகிறது...  தற்போதைய காலகட்டத்தில் கோவிட்-19ன் தாக்கம் முழுவதும் இந்த உலகத்தை விட்டு ஒழிய இந்தவருட நவராத்திரி பூஜாபலன் கிடைத்திட அனைவரும் பிரார்த்திப்போம்.

 

குறிப்பு.. ஒவ்வொரு மாணவ மாணவியரின் பிறந்த ஜாதகத்திலும், கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி எனும் நவக்கிர ராசி சக்கரத்தில், முறையே 2.-4.- 9 மற்றும் வித்தைக்கு அதிபதி புதன், குரு, பணிவாய்ப்புக்கு அதிபதி சனி, செவ்வாய் மற்றும் நல்ல ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆகிய அமைப்பின் இரகசியத்தை வீரவநல்லூர் – கஜேந்திர மோட்சம் அருளித்தந்த அத்தாளநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம் செல்லும் வழி துவக்கமாம் - மோர்மடம் ஊராட்சிப் பள்ளிக்கு அருகில் -   பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் பயின்று பட்டம் பெற்றுள்ள, 40 ஆண்டு அனுபவ ஜோதிடத் தம்பதி ரெங்கன் உஷா ஆகியோர் மிகச் சிறந்த முறையில் கணித்து, அவரவர் எதிர்கால கல்வி, ஆரோக்கியம், பணி, பதவி, திருமணம், வெளிநாடு பயணம் மற்றும் வியாபார லாப ஆதாய வழிவகைகள் செவ்வனே வழிகாட்டி வருகிறார்கள்.. வருக.. பயன் பெறுக.. சுபம்.


0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை