அமைதி குறைந்திருக்கும் நேரம் தெய்வ வழிபாட்டுத் துதிகள் நமக்கு நல்வினைக்கு வழிகாட்டும் என்பது அனுபவித்த சான்றோர்களின் கருத்து. அதன் அடிப்படையில் தினமும் நாம் அமைதி குறைந்திருக்கும் நேரம் என்று கருதாம்ல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக அல்லது முடிந்தவர்கள் தினமும் காலை பிரார்த்தனை மாலைப் பிரார்த்னை வேளையில் அவரவர் விருப்ப தெய்வ துதிகள் மனம் லயித்து உச்சரிக்க நம் மன பாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த வகையில் ஒருசில வழிபாட்டு துதிகள் கீழே கொடுக்கிறோம்.
அமைதி குறைந்திருக்கும் நேரம் தெய்வ வழிபாட்டுத் துதிகள் நமக்கு நல்வினைக்கு வழிகாட்டும் என்பது அனுபவித்த சான்றோர்களின் கருத்து. அதன் அடிப்படையில் தினமும் நாம் அமைதி குறைந்திருக்கும் நேரம் என்று கருதாம்ல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக அல்லது முடிந்தவர்கள் தினமும் காலை பிரார்த்தனை மாலைப் பிரார்த்னை வேளையில் அவரவர் விருப்ப தெய்வ துதிகள் மனம் லயித்து உச்சரிக்க நம் மன பாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த வகையில் ஒருசில வழிபாட்டு துதிகள் கீழே கொடுக்கிறோம்.
அன்புள்ள வாசகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் புதிதாய் பிறக்கும் 2009 ஐ மகிழ்வுடன் வரவேற்போம்
"BHARATH AWARD" AWARDED TO ASTROLOGERS USHA-RENGAN COUPLE FOR EXCELLENCY IN PREDICTION ON 16 -11 - 2008 BY W.I. DEVARAM I.P.S., DGP (Retd.)

"MAHATMA GANDHI AWARD 2008 " FOR BEST COUPLE OF ASTROLOGER TO USHA RENGAN




.
ஜோதிடம் உண்மையா-பொய்யா ஒரு விளக்கம் நெல்லை டைம்ஸ் 26/09/2008 கட்டுரை,
தற்காலத்தில் இயந்திரமயமாகிய வாழ்க்கையின் நடுவில், எதிர்காலத்தினைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை முறையும் அமைந்து விட்டது. எதிர்காலம் குறித்த ஆய்வில் ஜாதகம் மூலம் அறிய முற்பட்டால், அங்கே தான் அதி அற்புதங்கள் நம் கண்களுக்குத் தெளிவாக புலப்படுகிறது. அந்த நேரம் தான் நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். நாம் யார்? நம் படைப்பின் ரகசியம் என்ன? நம் வாழ்க்கைப் பாதையில் நமக்குக் கிடைத்துள்ள தாய் - தந்தை, சொந்த பந்தங்கள், உறவுகள், நண்பர்கள், பணிச் சூழலில் கிடைக்கின்ற புதிய புதிய அனுபவங்கள், கசப்புணர்வுகள், சேர்க்கும் புண்ணியம் அல்லது பாபங்கள், சேமிப்புக்கள், சொத்து, சுகம், வாகனம், பூமி ஆகிய அனைத்தும் இந்த சாதாரண ஒரு சிறிய டைரி வடிவிலான ஜாதகம் மூலம் எப்படி கண்டுணரப்பெறுகிறது என அறிய வேண்டாமா?
ஒரு காலத்தில் குடிசை வீட்டிற்குள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் இருந்த நம் முன்னோர்கள், தற்போது ஒரு மணி நேரம் விளக்கில்லாமால் மின் சாதானங்கள் பயன்படுத்தாமல் இருக்க இயலவில்லையே, ஆனால் நம் தாய் தந்தையர் மற்றும் முன்னோர்கள் எப்படி அத்தகு சாதனங்கள் இல்லாமல் காலத்தினை கழித்தார்கள். என்ன வித்தியாசம் இந்த குறுகிய காலத்திற்குள்.. எல்லாம் மிஞ்சிவிட்டது.. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பம்.. சராசரி ஒரு மனிதனின் ஒரு மூளையால் செய்யக்கூடிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒரு நொடியில் செய்து கலக்குகின்றனவே.. ஏன் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒரு சாதாரண ரிமோட் கண்ரோல் ஒரு நொடியில் சானல் மாற்றுவதன் மூலம் எத்தனை வியப்பான மாற்றங்கள்..
மனிதன் கண்டுபிடித்த பொருட்களையும், விஞ்ஞான சாதனங்களையும் வைத்துக் கொண்டு பெருமூச்சு விடும் நாம் ஒரு கணம் யோசித்தால் தெரியும், இவற்றை எல்லாம் படைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இத்தகு அமைப்பினை நாம் காணுவோம் என்ற குறிப்புகள் பல்வேறு ஜாதக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவே. அவற்றுள் ஒரு சில முக்கிய அமைப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவ்வாறு நம் ஜாதகத்தில் உள்ளனவா எனத் தெளிந்து, அதன் அடிப்படையில் தான் நாம் நம் தொழில், குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வுகள் அமைத்துள்ளோமா என ஆய்வு செய்து கொள்ளலாமல்லாவா.
அதாவது, ஒவ்வொருவருக்கும் தனது ஆயுட் காலத்தில் ஒரு 12 ஆண்டுகள் வியாழவட்டம் என்னும் காலம் நடைபெறும். அக்கால கட்டத்தில் தோல்வி என்பதே இருக்காது, மாறாக நமது உயர்விற்கு எல்லா வழிகாட்டுதல்களும் தானாக நடைபெறும். எனவே பொருளாதாரம் ஆரோக்கியம், நிம்மதி, திருப்தியான வாழ்க்கை முறை என அடுக்கிக் கொண்டே மகிழ்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அக்கால கட்டம், நம்மில் பலர் உணராமல், சிறிய சந்தோஷம் மட்டுமே உணர்ந்து, அதற்குள் திருப்தி பெற்று, தொடரும் மகிழ்ச்சியை கூட்டக் கூடிய வியாபார, தொழில், வருவாய் முன்னேற்ங்களை ஆராயாமல், மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றத்துடன் தொடர் முயற்சி எடுக்காமல் நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே அவ்வாறின்றி தொடரும் மகிழ்ச்சி முழுமையையும் பெற்று பயனடைய கீழ்க்காண்பன போன்ற ஜாதக வழி விதிகளை ஆய்வு செய்து முன்னேற வேண்டுகிறோம்.
ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிக முக்கியமானதாகும். லக்னம் மற்றும் ஒன்பதாமிடம் வைத்து, குருவையும் இணைத்து பார்த்தால், அரசு மற்றும் பொது மக்களால் எந்நேரமும் மதிக்கப்படுபவராகவும், மேலும் நான்காம் வீட்டுடன் அத்தகு அமைப்பு பெற்றால் நீண்ட ஆயுளுடனும் வாழ இயலும் என அறியலாம். மேலும் தத்தம் ஜாதக வழியில், ஞாபக சக்தியும், எதையும் தீர்மானத்துடன் செய்யும் துணிவும் உள்ளனவா எனவும் , பலருக்கு உதவி செய்யும் தியாக உள்ளமும், உயர்ந்த பதவிகளில் தன்னை ஈடுபடுத்தி முன்னேறத் துடிப்பவர்களுக்கும் ஜாதக அமைப்பில், லக்ன - சந்திர அமைவிடத்திலிருந்து, கேந்திர 1,4,7,10 மற்றும் 5,9 ஆகிய கேந்திர மூலத் திரிகோண அளவிலும், திக் பலம், திருக் பலம் மற்றும் நைசர்சிக பலம் ஆகியவற்றின் மூலமும் தெளிவாக அறிந்து, வாய்ப்பும், நேரமும் இருக்கும் போதே தன் குடும்ப வாழ்க்கைய முறையினை முன்னேற்றப்படுத்திக் கொள்வீர்களாக.
மேலும் விவரங்களுக்கு, பாளை மார்க்கெட் ஆயிரத்தம்மன் கோவில் தென்வடல் ரோட்டில், 27 சிவன் மேலரத வீதியில், உள்ள சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிடத் தம்பதி திருமதி உஷா ரெங்கன் ஆகியயோரை அணுகலாம். தொலைபேசி: 2586300, 9443423997, 9442586300.
பிரிந்த குடும்பங்கள், உறவுகள், நட்புகள், பாசத்துடனும் அன்புடனும் ஒன்று சேர்க்கவும், பல்லாண்டு பகையை எளிதில் மறக்கவும், என பல சாதனைகளை படைத்து வரும் பாளை மார்க்கெட் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, சமீப காலமாக உறவுகளிடையே பலர் வாழ்க்கையில் முக்கியமாக கணவன், மனைவி, பெற்றோர் குழந்தைகள், அண்டை அயலார், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர் ஆகியோர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் நிமித்தம் பனிப்போர் தொடர்ந்து இனிக்க - இனிக்க வழிநடக்க வேண்டிய வாழ்க்கையில் இனம் புரியாத கசப்பு உணர்வுகள் ஆரம்பித்து காலப் போக்கில் அது வெறுப்பாகவும், பகையாகவும் மாறி அர்த்தமில்லாத வாழ்க்கையாக்கி, பிறப்பின் ரகசியமாம் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைமாறி, ஏனோ பிறந்தோம் - வளர்ந்தோம் - என எதையும் சாதிக்க இயலாமல் ஆகி விடுகிறது.
இம்மாதிரியான மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் மனக்கசப்பு எதனால் ஏற்படுகிறது என அறிய முற்பட்டோமானால் அதற்குரிய பல காரணங்களில் முக்கியமானதாக மற்றவரைப் பார்த்து, ‘நாமும் அவரைப்போல் இல்லையே” என்ற ஆதங்கம் தான் முதல் காரணமாகி விடுகிறது. (ஜாதக ரீதியில் குரு, கேது, புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் ஆதிபத்திய நிலை)
ஓரே வீட்டில், தம்பியைப் போல், தங்கையைப் போல் நம்மிடம் பெற்றோர் பாசம் காண்பிக்கவில்லையே என்ற தேவையில்லா சந்தேகம் கொள்ளும் மூத்த குழந்தைகளும், அக்காவைப் போல் தனக்கு திருமணம் நடத்தவில்லை, சீர்கள் செய்ய வில்லை ஆகியவை போன்று குறைபடும் மற்ற சகோதரிகளும், தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லையோ என தனக்குத் தானே குறைபட்டுக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மைகளும், கணவன் மனைவிகளுக்குள் தேவையற்ற தாம்பத்திய சந்தேகங்களும், குறிப்பாக கல்வியில் ஒன்றாகப் பயின்ற மாணவ மாணவியருக்குள், அவருக்கு நிகராகத் தனக்குப் பணி, திருமண வாய்ப்புகள், இல்லையே என்றும், இந்நாளில் ஏதோ ஒரு நேரத்தில், ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் கிடைத்த சிறு உதாரணங்களைக் காரண காரியமாகக் காட்டி இப்படித் தான் நடக்கிறது, என்னைத் தான் எவரும் போற்றுவதில்லை, என்னை தாழ்த்தத் தான் உறவுகள், சொந்தங்கள், அக்கம் பக்கத்தார் உள்ளனர் எனத் தனக்குத் தானே நாள்தோறும் தூக்கமில்லாமல், அதையே எண்ணி, நாளடைவில், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, கடைசியில், சைக்கோஜெனிக் சிம்ப்டம்ப்ஸ் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகி, கல்வியில், பணியில், பிறரிடம் பேசி மகிழ்வதில், நட்பு பாராட்டுவதில், மங்கல குதூகல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், சகஜமாக வெளியில் சென்று அன்றாட வாழ்க்கையில் சராசரியாக கலந்து கொள்வதில் இருந்து விலகி, தனிமையாக தனக்குத் தானே ஒரு சோக வளையத்தை ஏற்படுத்தி கடைசியில் வாழ்க்கையில் வெறுப்பைச் சந்திக்கின்ற அளவில் சோகமாகிவிடும் ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் என்னும் மாயை நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ ஏற்பட்டு, டிப்ரசன் எனும் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டு நாம் அதை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நம்மில் பலருக்கு வந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட மிகச் சிறந்த வழியாக தியானம் , யோகா இவற்றுடன் மனச்சோர்வை நீக்கும் தகுந்த இசைப் பாடல்களும் நல்ல பலன் தருகின்றன. உதாரணமாக, திருமண வீடுகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திருவிழாக்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்கின்ற தனி உற்சாகமும் தான். எப்படி? நம் உறவுகளையும், சொந்த பந்தங்களையும் பார்க்கிறோம், அது மட்டுமா.. .. இசையை நுகர்கிறோம்.. .. யாரோ யாருக்கோ செய்கின்ற திருமணம், சடங்கு என்றில்லாமல் நாமும் கலந்து கொண்டோம், நம்மாலும் சர்வ சாதராணமாக ஜன ரஞ்சகமான இடங்களில் தெளிவாக நடந்து கொள்ளமுடிகிறது என்ற தன்னம்பிக்கை கிடைக்கின்றதல்லவா.. இப்படியே சொல்லிக் கொண்டே செல்லலாம். மொத்தத்தில் நமக்கு வேண்டிய மூல மந்திரம் “ மனோதிடமும் முகமலர்ச்சியும்” இருந்து விட்டால் எல்லோரும் இந்நாட்டில் உயர்வுதனைப் பெற்றிடலாம். ஜாதக ரீதியில் வரும் பங்குனி உத்திரத்தன்று குல தெய்வமாம் சாஸ்தாவை வழிபடுதலாலும் இத்தகு மனோ பலமும், முகமலர்ச்சியும் நாம் அடைய முடியம் என்பது சான்றோர்களின் நம்பிக்கை. சுபம்.
மேலும் விவரமறிய: 9442586300




