தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 நவராத்திரி ஒன்பது நாட்களும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடும் பொழுது முதல் மூன்று நாட்கள்

 ஸ்ரீதுர்க்கை வடிவிலும் 

தொடர்ந்து மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமி வடிவிலும் 

மேலும் உள்ள மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதி வடிவிலும் 

வணங்குவது மரபு..

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள் இந்த சரஸ்வதிபூஜை நாளாகும் கூத்தனூர் வேதாரணியம் கண்டியூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மதுரை தஞ்சை போன்ற ஊர்களில் உள்ள சரஸ்வதிதேவி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுண்டு

மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு என்பது அடை மொழி அதாவது நவராத்திரி காலத்தில் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய பூஜையை தொடங்க வேண்டும் அப்போது ஆவாகனம் செய்யவேண்டும் அதாவது சரஸ்வதி படங்கள் விக்ரகங்களில் ஆவாகனம் செய்ய வேண்டும் மேலும் நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேல் சரஸ்வதி படத்தை வைத்து வழிபடலாம்.

கலைவாணி கல்விக்கரசி என பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை தெரிந்து கொள்வோமா..

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி!

 சரஸ் என்றால் நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள் கல்வியை மற்றும் அதன் ஊற்றாகவும் ஞான வழியாகவும் அள்ளித் தருபவளே சரஸ்வதி.. சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வழங்கப்பட்டது வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலான அவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்

சரஸ்வதி மிக அழகு அமைதி பார்வையுடன் பிரகாசிப்பார் கல்வியின் தெய்வம் பிரம்ம பிரியை ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம் ஞானம் அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி அறிவம் ஞானமும் உறுதியானது நம்முடனே வருவதும் அன்னத்தை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியை நாம் பார்க்கிறோம் அன்னம் பாலினையும் நீரினையும் பிரித்து பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல நாம் ஞானத்தினை எடுத்துக்கொண்டு அவலத்தை நீக்க வேண்டும் என்பது பொருள்..

முதல்நாள் சரஸ்வதி பூஜை செய்தவர்கள் மறுநாள் காலையில் சரஸ்வதி பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்..

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாயே போற்றி போற்றி..



0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை