தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


நவராத்திரி என்றாலே, கல்வித் திருநாளாய் கொண்டாடிடும் குழந்தைகளுக்கு ஓர் உன்னத ஆலோசனை..
டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., Dip. in Panchakarma., அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு, சகல வியாதிகளுக்கும் நல்ல அனுகூலமான, வீட்டு வைத்திய முறைகளையும், பழங்கால சித்தர்கள் முறையிலான ஆச்சரியமான மருத்துவ குணங்களை உடைய பல்வேறு மூலிகை மற்றும், அன்றாட பயன்பாட்டில் உள்ள வீட்டுச் சமையல் பொருட்களையும் முக்கிய உணவு பழக்க வழக்கங்களையும் எளிதாய் எடுத்துரைத்து, மனச் சுமையோடு, உள்ள, உடல் ஆரோக்கிய குறைபாடுகளை களைய நல்லாலோசனைகள் நாளும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்த நவராத்திரியில்..
வித்யா பூஜைக்கென பேட்டியளித்த துணுக்குச் செய்தி இதோ!.. கவனமாய் படிப்போம்..நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வி அறிவு வளர அத்தகு முறைகளை கடைபிடிப்போம்.. வாழக் வளமுடன். நன்றி.

நவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.!.
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளை தங்களின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்றும் ரோபாக்களாக பார்க்காமல், வளரும் பருவத்தில் தனக்கே உரிய, ஓடி, ஆடி விளையாடுத்ல், சுதந்திரமாக பேச, சிந்தித்து செயல்பட அனுமதி அளிக்கலாமல்லவா..
குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றிக் கனிகளை அள்ளிக் குவிக்க முடியும். உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதே முழுமையாக ஆரோக்கியத்தைக் குறிக்கும். மனதி்னை பலப்படுத்த ”உன்னால் முடியும்” ”நீ சாதிப்பாய்” போன்ற நேர்மறையான சொற்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கையான பெற்றோர்களின் பேச்சு, தெளிவான சிந்தனை, குறிக்கோளுடன் கூடிய திட்டமும் – செயல்படுத்துதலும் சரியான வழிமுறை இருந்தால் மட்டும் சாதிக்க முடியும். ” வாழ்ந்து பார்க்கத் தான் வாழ்க்கை ” என்பதை மற்நது விடக்கூடாது. வாழ்க்கை ஜெயித்துக் காட்டதான் எனவும், தேர்வு போ்னறவை நியாயமான போராட்டங்கள் என்பதையும் உணர வைக்க வேண்டும்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கேட்டது கேட்ட மாத்திரத்தில் பெற்றோர்களின் சக்திக்கு மிஞ்சியதாக இருந்தாலும், கிடைக்கச் செய்கிறார்கள். இதனால், தாங்கள் நினைத்தவைகள் அனைத்துமே கிடைத்தே தீர வேண்டும் என பிடிவாதத்துடன் இருக்கப் பழகிக் கொள்கின்றன குழந்தைகள்!. நினைத்ததற்கு மாறாக சிறு தோல்வி ஏற்பட்டாலும், மனச் சோர்வு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு தவறான முடிவுகளுக்கு முயற்சி செய்து இன்னல்களைத் தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.
ஆலமரம் இருக்கிறது.. நன்றாக வேரூன்றி பக்கக் கிளைகளுடன் பார்ப்பதற்கு பெரிதாக இருந்த போதும், பெரும புயலில் அம்மரம் முழுவதுமாக சரிவதில்லையா.. ஆனால் நாணல் இருக்கிறது.. எத்தகைய புயல், மழை மற்றும் இயற்கை சீற்றங்களையும் வளைந்து கொடுத்து சமாளிப்பதில்லையா..
இவற்றிற்குள்ள தன்மைகளை குழந்தைகளுக்கு விளக்குவதோடு, நாம் எடுக்கின்ற முடிவுகளும். திடமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் வளைந்து கொடுத்து தனக்கு கேடு தராமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணஙக்ளையும் அறிவுரை மூலம் உருவாக்க வேண்டும்.
உடலை வன்மைப் படுத்தவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும சித்தர்கள் அருளிய அறிவுரைகள்
சூரிய உதயத்திற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் யோகாசனம் செய்து குறிப்பாக, ஏக பாத ஆசனம், பத்மாசனம், சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களுககு கூடுதல் கவனம் செலுத்தி, வலிமை பெறலாம்.

ஞான முத்திரையை தினமும், காலை மாலை 20 நிமிடம், செய்ய வேண்டும். ஞான முத்திரை என்பது, நன்கு அமர்ந்து கொண்டு, குரு விரலை (ஆள்காட்டி விரல் ) கட்டை விரலின் நுனிப் பகுதியைத் தொடுமாறு வைத்து விட்டு விட்டு அழுத்தம் தர வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். வல்லாரை, பிரமி ஆகிய மூலிகை மருந்துகளை அளவறந்து கொடுக்கலாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கலாகாது.
இப்படிச் செய்வதால், நினைவாற்றல் – மனதை ஒருமுகப் படுத்தும் திறன் – டென்ஷன் நீங்கி அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கிடைப்பதோடு முதன்மை மாணவ மாணவியாக திகழ்ந்து, பெற்றோரையும், பயிற்றுவிக்கும் ஆசிரிய ஆசிரியைகளையும் மகிழ்விக்கச் செய்லாம் என்பதில் ஐயமில்லை.. மாலை நேரங்களில் ”சினாக்ஸ்” என்ற வகையில், உணவாக மநதத் தன்மையை ஏற்படுத்தும் எண்ணெயப் பதார்த்தங்களை விலக்கி, குழந்தைகளின் ஜாதகத்தின் கிரகநிலைக்கேற்ப, அவர்தம் ஜாதகத்தில் கண்டுள்ள கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி ஆகிய இடங்களில் உள்ள ஆதிபத்தியம் காரகத்துவத்திற்கேற்ப, உரிய தெய்வத்தை பூஜிப்பதோடு, நைவேத்யமாக, சத்துள்ள தானியங்களை (முக்கியமாக தன் ஜாதகத்திற்கு ஏற்ற) உட்கொள்ள தெயவ பலம் கிட்டுவதோடு, உடலுக்குத் தேவையான புரதமும் கிடைக்கிறது. கலைவாணி கருணை அருள் கிடைத்தால் எல்லா வகையிலும் காரியசித்தி பெற்று வளமுடன் வாழலாம்.
மேலும் விவரமறிய – டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., மற்றும் ஜோதிட தம்பதி உஷாரெங்ன், சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனை இயக்கம், 24A சிவன் கோவில் மேல ரத வீதி, பாளை. தொ.பேசி. 2586300, கைபேசி 9442586300, 9443423897.

அன்புடையீர்,
வணக்கம்.
கோள்களின் சஞ்சாரங்களினால், பஞ்ச பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில், நன்மையும், தீமையும் கலந்த மாறுபாடுகள் நிகழ்வது இன்றைய நாளில் பல்வேறு கோணங்களில், விஞ்ஞான ரீதியாகக் கூட பழங்கால சித்தர்களின் ஆராய்ச்சிக் கூற்றுகளைத் தொடர்ந்து ஆய்வு நடததி நிரூபிக்கப்பட்டு வருகிறது என்பது உலகறிந்த பொருளாகும்.

இந்த ஆண்டு விரோதி ஆண்டாகி, இந்த ஆண்டில், மெதுவாக நகரும் கோள்கள் எனப் பெயர் பெற்று, மெதுவாக நகர்வதன் பொருட்டு, நல்லதையும், கெட்டதையும் அவரவர் ராசி கிரகநிலைகளின் படி, கொடுத்தும், கெடுத்தும் தத்தம் உண்மை நிலைகளை உணர்த்தும் பொருட்டு, நான்கு முக்கிய கிரகங்களான, சனி, ராகு-கேது, குரு ஆகிய பெயர்ச்சியின் தினங்கள் கீழே கொடுத்துள்ளோம். அவரவர் ராசி மற்றும் நட்சத்திர, பிறந்த நாள், நேரம் ஆகியவை குறிப்பிட்டு, வருங்காலத்துள் சுமார் ஒரு ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு வரை ஏற்படும மாற்றங்களைத் தெரிந்து கொள்ள அணுகுங்கள். தங்களுக்கு, ஆலோசனைகளையும், உரிய பரிகார விளக்கங்களையும் அள்ளித் தருகிறோம். தங்கள் காணிக்கையை அனுப்பி தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

நடப்பு விரோதி ஆண்டில், மெதுவாக நகரும் கோள்கள் எனப்படும் முக்கிய கோள்களின் உங்களுக்கு, நானகு கோள்களின் பெரய்ச்சியும் என்ன பலனைத் தரும் என்பதைக் குறிப்பிட்டு அதற்குரிய பரிகாரங்களையும் தெரிவிக்க உரிய காணிக்கை அனுப்பி பலன் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

இராசி மாற்றங்கள் முறையே --

”சனிப் பெயர்ச்சி” சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ம் நாள் (26-09-2009) சனிக் கிழமை அதிகாலை பெயர்ச்சி

”ராகு பெயர்ச்சி” விரோதி வருடம் ஐப்பசி மாதம் 10 ம் தேதி ( 27-10-2009) செவ்வாய்க்கிழமை மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (அதாவது பின்னங்கால் வழியாக வருவது - Anti-Clockwise Movement ) பெயர்ச்சி

”கேது பெயர்ச்சி” விரோதி வருடம் ஐப்பசி மாதம் 10 ம்தேதி (27-10-2009) செவ்வாய்க்கிழமை கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சி.

குரு பெயர்ச்சி” விரோதி வருடம் கார்த்திகை மாதம் 29 ம்நாள் (15-12-2009) செவ்வாய்க கிழமை மகரத்திலிருந்து கும்பத்திற்குப் பெயர்ச்சி.
தங்கள் அன்புள்ள,
ஜோதிட தம்பதி ஜோதிட கலைமாமணி உஷா ரெங்கன்.




அன்புடையீர்,

வணக்கம். ஒவ்வொருவரின் உடல்நிலை ஆரோக்கியம், கல்வி, வேலை, பதவி உயர்வு, திருமணம், குழந்தைப்பேறு, வாழ்க்கைத் துணையின் பரஸ்பர அன்பும் அனவிந்யமும், எதிர்கால் வாழ்க்கைக்கு உரிய மூலதனச் சேர்க்கை ஆகியவை நிர்ணயிப்பது யார்? குழந்தையாக பிறந்த ஒவ்வொருவரும், பிறந்த முதல் நாளில் துவங்கும், படிப்படியான வளர்ச்சி உடல் வளர்ச்சி, உள்ள வளர்சசி, ஆன்ம வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்டிடையில் நல்ல வளர்ச்சி காண உதவுவது எது? யார்?

பெற்றோரும் - உற்றாரும் - அண்டை அயலாரும் - நண்பர்களும் - வாழ்க்கைத் துணையும் என ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், ஒவ்வோரிடத்தில் பெறும் உதவிகளும், அவர்களும் தயங்காமல் உதவுவதும் எதன் அடி்பபடையில்? எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை ” கோள்களின் சஞ்சாரம் தான்” என அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே அனைவரும தத்தம் ஜாதக, நட்சத்திர, ராசி. லக்னம் ஆகியவற்றின் அடிப்படையில், அவ்வாறு நடப்பு விரோதி ஆண்டில் என்ன என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என அறிந்து கொள்ள அழையுங்கள் (00) +919443423897 அல்லது இமெயில் செய்யுங்கள் e-mail: tamiljoshier@gmail.com நன்றி.. நன்றி!!..


நவக்கிரஹ ஸ்லோகம்
சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!
அங்காரக காய்த்ரீ
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!!
புத காயத்ரீ
ஆத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!
குரு காயத்ரி
ஆங்கீரஸாய வித்மஹே! சராசார்யாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!
சுக்கிர காயத்ரி
ராஜதாபாய வித்மஹே! ப்ருகு கதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!
சனி காயத்ரி
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
ராகு காயத்ரி
ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!
கேது காயத்ரி
சிதர வர்ணாய வித்மஹே! ஸர்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

அன்புள்ள ஆன்மீக அன்பர்களுக்கும், எங்கள் அன்பின் இதயத்துள் நிறைந்திருக்கும் சான்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்க்கும், தன் சீரிய பணியின் நிமித்தம் வருங்கால சமூகத்தை வழிநடத்தும் ஆசிரிய, மருத்துவ, வேத, ஜோதிட, விஞ்ஞானப் பணியாற்றும் மிக மிக முக்கிய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


சிற்சில இயற்கைச் சீற்றங்கள் நம்மை ஆட்டிப்படைக்கத் தான் இருக்கின்றன. எனவே மேற்குறித்த நவக்கிரக காயத்ரீ தினமும் சுத்தமாக இருந்து உச்சாடனம் செய்து வர எத்தகு தீமைகளும் விலகி நமக்கு நன்மை ஓன்றே கிடைக்கும் அருள் கிட்டுவதாக!.
ஜோதிட தம்பதி உஷா ரெங்கன்.
http://www.tamil-astrology.com/
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com.











விநாயகர் வழிபாடு

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

திருமால் வழிபாடு

திங்கள் செவ்வாயிலுன் திருவமு தருந்தினால்
தீராத வினை தீருமே
பொங்கு புதன் வியாழனில பூஜை செய்தால்
பூர்வ பாவம் நீங்குமே
மங்கலம் வெள்ளி சனி ஞாயிறில் உன்னையே
மனது வைத்தால் இன்பமே
மங்காத மாதமே வருஷம் சகாப்தமே
மகராஜ திருமால் சுகமே

ஆஞ்சநேயர் வழிபாடு

அஞ்சிலெ ஒன்று பெற்றான் அஞசிலே
ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நமை
அளித்துக் காப்பான்.


இராமன் வழிபாடு

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்


ஸ்ரீ ரெங்கநாதர் வழிபாடு

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பேனோ? ஏழை நான்! - அன்று
கருவரங்கத்தும் கிளந்து கை கொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

கண்ணன் வழிபாடு

பச்சை மலைபோல் மேனி பவளவாய்க்
கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிரயான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே



சக்தி வழிபாடு

நாயகி. நான்முகி, நாராயணி கைநளினபஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய, கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே. --



இல்வாழ்க்கையை இல்லற சோலையாக்கும் இரகசியங்கள்
(ஜோதிட கலைமாமணி-ஜோதிட தம்பதி வீரவநல்லூர் உஷா ரெங்கன்)

நாமறிந்த கலைகள் பலவற்றுள் ஜோதிடக்கலை ஒன்று தான் நம் எதிர்காலத்தை இனிதே உணர்த்தும் அற்புதப் பாங்கை நமக்களிக்கின்றன.

இவ்வரிய கலைதனை தாமும் உணர்ந்து மற்றோர்க்கும் எடுத்துரைக்கும் பாங்கை இறையருளால் பெற்ற ஜோதிட விஞ்ஞானிகள், இவ்வரிய கலையை பிரகாசிக்க துணை நிற்கும், வேத ஆகம விற்பன்னர்கள், புரோஹித, பாகவத, தெய்வ கைங்கர்ய ஆச்சார்யர்கள் ஆகியோர் ஒத்துழைப்போடு நாளும் பொழுதும் கலைவளர்க்க தொண்டு புரிந்திட வேண்டுமே. அந்த வரிசையில், ஜோதிட தம்பதியாய், பரம்பரையாகவும், பல்கலைக்கழக பட்டய, பட்ட ஜோதிடவியல் பயின்று, பல்வேறு வார, மாத, செய்தி இதழ்களில், ஜோதிடக்கட்டுரை எழுதி வருவதுடன், இணைய தளம் (www.tamil-astrology.com) மூலமும் 25 ஆண்டுகளாக ஜோதிட சேவையாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி திரு நா. ரெங்கன் எம்.ஏ.,டி.டி.எட்., டி.அஸ்ட்ரோ., தமிழாசிரியர், திருமதி அ. உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ)., டி.அஸ்ட்ரோ ஆகியோரின் திருமண பொருத்த நிர்ணயக் குறிப்பைக் காண்போமா..

விவாஹ பொருத்த விவரங்கள்

தினப் பொருத்தம்

வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)
கணப்பொருத்தம்

நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)
மாஹேந்திர பொருத்தம்

வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7க்குள் வந்தால் அதமம்.
யோனிப் பொருத்தம்

இல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு - குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)
ராசிப் பொருத்தம்

வதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6வது 8வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)
ராசி அதிபதி பொருத்தம்

வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்
கிரகம்
நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்திரன், செவ்வாய், குரு
புதன்
சுக்கிரன், பகை
சந்திரன்
சுக்கிரன், புதன்
செவ், குரு, சுக், சனி
சத்ரு இல்லை
செவ்வாய்
சூரியன், சந்திரன், குரு
சுக்கிரன், சனி
புதன்
புதன்
சூரியன், சுக்கிரன், சனி
செவ்வாய், குரு
சந்திரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்வாய்
சனி
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
புதன், சனி
செவ்வாய், குரு
சூரியன், சந்திரன்
சனி
புதன், சுக்கிரன்
வியாழன்
சூரியன், சந்திரன்,செவ்

குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,
ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,
கடக ராசிக்கு அதிபதி சந்திரன்
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்
தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு
மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.
8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.
மேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்
மிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி
கடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு
சிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்
கன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்
துலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்
விருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்
தனுசு பெண் ராசி எனில் மீனம்
மகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்
கும்பம் பெண் ராசி எனில் மேஷம்
மீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.
ரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜூ
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ
பரணி, பூரம், பூராடம் மற்றும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ
அசுபதி, மகம், மூலம் மற்றும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ
குறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.
வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.
அசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,
ரோகிணி - சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.

மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று, வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.

Important note :
If you want to know the marriage matching to bride and bride groom – please contact with fees – we will send the horo matching remarks and charts through your mail id on that day without delay. thank you. (contact: +919443423897 or email:
tamiljoshier@gmail.com or joshier_urrao@yahoo.com or usharengan@hotmail.com

விவரமான திருமணபொருத்தம் அறிய வேண்டுமா?.. உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால் வாடிக்கையாளராகி பின்னர் வாடிக்கையாளர் எண்ணைக் குறிப்பிட்டு தொடர்ந்து தொடர்பு கொண்டு பலன் அறியலாம் தானே..
தங்களுக்கு சிரமம் ஏதுமின்றி, ஒரே நாளில் தாங்கள் தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை மட்டுமே மொபைல் போனில் சொல்லி விட்டு தங்கள் இமெயில் முகவரி கொடுத்து வி்ட்டால் தங்களுக்கு பதிலாக வந்தடையும் விதத்தில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்பான ஆருயிர் பாசமிகு பண்புசால் நண்பர்களுக்கு வணக்கம்.
இணைய தளம் மூலம் ராசி பலன் பார்த்த பலர் தொடர்பு கொண்டு தத்தம் அனுபவங்களாக, இவ்வாண்டு ராசிபலன் புதிய தெம்பும், மகிழ்வும் தந்ததாகக் கூறி, பரிசு அனுப்ப வழி கேட்டுள்ளதால், இதோ ஒரு சிறு தகவல் - தாங்கள் எங்களது மின்னஞ்சல் மூலம் tamiljoshier@gmail.com என்ற முகவரிக்கு PayPal (www.paypal.com) வழியாக உதவலாம் - தங்கள் உதவிகள் மூலம் தெய்வத் திருத்தொண்டுகள் செய்வதால் தங்களுக்கும் மகிழ்வுடன் கூடிய பரிகார பலன் கிடைக்கும் என்ற பணிவான வேண்டுதலை பணிவுடன் சமர்ப்பிக்கி்னறோம். நன்றி..
விரோதி (தமிழ் புத்தாண்டு) வருட ராசி பலன்கள்
கணிதம் திருமதி
அ. உஷா ரெங்கன் D.A., (Astro.,) B.A. (Astro.,)
சுவாதி ஜோதிட ஆய்வகம், பாளை. கைபேசி 9443423897.
இணையதளம் :
www.tamil-astrology.com
முன்னுரை
தமிழ்ப்புத்தாண்டு தை மாதம் துவங்கும் என்ற பரவலான மாற்றங்கள் ஏற்பட்ட போதும், மேஷ சங்கிரமணம் என்பது, முதல் ராசியாம் மேஷத்தில் சூரியன் நுழையும் அந்த நொடியை விஷூ புண்யகாலம் (அனைத்து கடவுள்களும் ஒன்று சேரும் அயன காலம் ) என்றும் கொண்டாடுவதுண்டு. அந்த வழியில் தமிழ் ஆண்டுகளுக்கு வரிசையாக 60 பெயர்கள் வழங்கி வருவதுண்டு. எனவே பெயர் மாறும் சித்திரை மாத முதல் நாளான்று கோவில்களில் வழிபாடு செய்து, அன்னதானம் மற்றும் விசேஷ பிரார்த்தனைகள் மேற்கொள்வதால் அந்த ஆண்டு முழுவதும், நம் எதிர்கால கல்வி, தொழில், வருவாய், மகிழ்ச்சி போன்ற முன்னேற்றங்கள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு பங்குனி 31ம் நாள் இரவு ஆங்கில தேதிப்படி 14-04-2009 – 00-45க்கு துவங்குகிறது. இப்போது துவங்கும் இந்த தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 23வது ஆண்டாக விரோதி என்னும் நாமத்தில் மலர்கிறது. 23ன் கூட்டு எண் என்பது 5 என்னும் புத பகவானையும், தனித்தனியாக, 2 சந்திர பகவானையும், 3 குரு பகவானையும் குறிப்பிடுவதால், ஆக மூன்றும் சுபக்கிரகங்களில் ஆதிக்க ஆண்டாக மலர்வதால், நல்ல பல முன்னேற்றங்கள் இந்த உலகம் கண்டறியும் என்பதில் ஐயமில்லை. 12 ராசிகளுக்கு ஓராண்டு ராசி பலன் பார்ப்போமா...
மேஷம்

குரு பதினொன்றில் உள்ளதால் லாப ஆதாயம் உண்டு. வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் எதிர்பாராத செலவுகள் உண்டு. பணியில் உள்ளவர்களுக்கு, எதிர் பார்த்த மாற்றங்கள் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் கிடைத்து மகிழ்வடைவர். உடன் பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கூடும். புதிய வியாபார யுக்திகள் இந்த ஆண்டு கை கொடுக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உற்சாத்துடன் மட்டுமின்றி திட்டமிட்டு செயல்படும் அனைத்து செயல்களிலும் விரைவான முன்னேற்றம் கிடைக்கும். கட்சியில் தொண்டர்கள் தலைவர்களுக்காக, எல்லா வகையிலும் உடனிருந்து உதவி செய்வார்கள்
ரிஷபம்

டிசம்பர் வரை சனி பகவான் ஐந்தாமிடத்தில் உள்ளார். மதிப்பு மரியாதை கூடும். குரு பகவானின் பார்வை மேலும் நன்மை செய்யும். தங்களுக்கு மன வேதனையைக் கொடுத்தவர்கள் திருந்தி தங்களிடம் மன்னிப்பு கோருவார்கள். வரும் மே மாதம் அதிகார அந்தஸ்து உள்ள பதவிகள் கிடைக்கும். மேடைப் பேச்சிலும், சரி உதவி கோரி பொது மக்களை அனுசரிப்பவர்களும் சரி சற்று அகலக் கால் வைக்காமல், நிதானமாக நன்று ஆலோசித்து, அழைத்துப் பேசுவதைவிட, நெருங்கிச் சென்று உதவி கேட்பது சிறந்தது. முக்கியமாக தங்களுக்கு அடுத்த இருக்கையில் எப்போதும், ஓர் அடிமட்டத் தொண்டரை அமர வைத்து மகிழ்வது, அரசியல்வாதிகளுக்கு மேலும் நன்மை தரும். மாணவர்களுக்கு புதிய படிப்பில் ஆர்வம் கூடும். கணிணியை விட கணக்கும் அறிவியலும் தேவை என்ற எண்ணம் மேலோங்கும்
மிதுனம்

ஆகஸ்ட் வரை பரவாயில்லை. தொடரும் காலம் டிசம்பர் வரை நிதானம் தேவை. வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்கள் சற்று பரிகாரம் செய்து கொள்ள உத்தமம். 7மிடத்தில் உள்ள ராகு குடும்பத்தில் சுகக்கேடுகள் தர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தொழில் முன்னேற்றம் உண்டு. மேற்கொண்ட பணிகளில் கச்சிதமாக முடிக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. டிசம்பர் முதல் மார்ச்ச வரை கேது 12மிடத்தில் உள்ளதால் ஆனமீக ஈடுபாடுகளுடன் ஆன்மீகத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்படும். கடினமாக உழைக்கும் பணியாளர்களுக்கு விருது காத்திருக்கிறது. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அரசியல் அன்பர்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
கடகம்

இந்த ஆண்டு மிக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. பல வழிகளிலும் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் இருந்து வந்த ஐந்தாண்டுகால பிரச்சனை இந்த ஆண்டு முடிவுக்கு வரும். உடல்நலத்தில் சிறிது ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால், அதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை. தனுசுவில் உள்ள ராகுவால், இந்த ஆண்டு இழந்த பல வாய்ப்புக்கள் தானே வந்து சேரும். நீண்ட நாட்களாக குறைபட்ட வருவாய் இழப்பு சரிசெய்யப்பட்டு விடும். வாங்கும் வருவாய் இரண்டு மடங்காக பெருகும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாதம் ஏழரைச் சனி முழுமையாக விலகிவிடும்..
சிம்மம்

ஜென்மச்சனி நடைபெறுவதால், டிசம்பர் வரை வீடு வாகனம் வாங்க எண்ணியிருந்தால், பிறந்த ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ள உத்தமம். தனக்குத் துணை தன் பழைய நண்பர்களே என்பதை அறிவுறுத்திடும் காலமாகும். புதிய நண்பர்கள் தனக்கு ஆதாயம் தேடி தான் தன்னிடம் அணுகுவார்கள். இந்த ஆண்டு 40 சதவிகிதம் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். ஆனால், பெரிய சாதனை என்று அதிக ஆரவாரம் கொள்ளாமல் இருந்து, நிதானமாக சூட்சமாக யோசித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பது சிறந்தது. ஊதிய உயர்வுக்கு வழி காணலாம். இதர வருவாய் எண்ணம் தற்காலிகமாக நிறுத்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் அக்கரை காட்டுவது சிறந்தது. பல நாள் தள்ளிப் போன வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.
கன்னி

ஏழரைச் சனியின் ஜெனமச் சனி துவக்கம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் என்றும் பயமுறுத்த வாய்ப்பு உள்ளது. சனி கன்னி ராசிக்கு நட்புக் கிரகம் என்பதால், அவ்வளவு பயப்படத் தேவையில்லை.
ஆனால் சில கலகங்கள் குடும்பத்தில் வந்து மறையும். தீயோருடன் தெரியாத வகையில் நட்பு வைத்துக் கொண்டு ஒரு சில இழப்புக்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நிதானமாக ஆலோசித்து நட்பு கொள்ள உத்தமம். போட்டிகளுக்குத் தகுந்தவாறு செயல்பட்டு, சீசன் அறிந்து தொழிலில் அதிக லாபம் பெறுவோர் சிறப்பான முன்னேற்றம் காணுவர். விவசாயிகள் மனமகிழ்ச்சி அடைவர். அது போன்று உடலுழைப்பில் உள்ளவர்களுக்கு சனி தன் பங்குக்கு வருவாயை அள்ளித் தருவார். நடு இரவுப் பிரயாணம் இந்த ஆண்டு முழுவதும் உகந்ததல்ல. தவிர்க்க இயலாத பிரயாணத்தின் போது, சட்டைப்பையில் இஷ்ட தெய்வ படங்கள் வைத்துக் கொள்வது நல்லது.
துலாம்

சனி சிம்மத்தில் இருக்கும் வரை நல்ல முன்னேற்றம் தொரும். சனி பகவான் கன்னிக்கு பெயர்ச்சி ஆனதும், ஏழரைச் சனியாக உருவெடுக்கிறார். 25-09-2009க்கு பின் நிதானம் தேவை. முதலீடுகளில், ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. சில வீடுகளில் சுபச் செலவுகள் கூடிவரும். ஆனால் ஏழரைச் சனிக்காக இந்த ஆண்டு அதிக கவலை கொள்ளத் தேவையில்லை. 5மிடத்தில் உள்ள குரு சனியைப் பார்ப்பதால், உயர்நதவர்களின் ஆதரவு கிட்டி மேலும் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, வேலைச்சுமை என்றெல்லாம் ஒரிரு நன்மையும், தீமையும் கலந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி ஓய்வு பெறுபவர்கள் இடமாற்றம் செய்து புதிய யுக்திகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. குழந்தைகளைப் பற்றிய கவலைகள் சற்று தலை தூக்கும். எனினுமு் பிரார்த்தனை வழிபாடுகளில் அதற்கு மகிழ்ச்சி காணலாம்.
விருச்சிகம்

வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு கைகொடுக்கும்.. சனி லாபஸ்தானத்தில் வருவதால், எளிதில் வீடு வாங்கலாம், வெளி நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஒரு சில உறுதி மொழிகளை எடுத்து அதனை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, இந்த ஆண்டு எடுக்கும் உறுதி மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும். தங்களுக்கு சாதக அமைப்பினை தந்து சிறப்படையச் செய்யும். கலவி, உடல்நலம், பொன், பொருள் சேர்க்கை சிறப்பாக உள்ளது. கணவருடன் சுமூகமாக செயல்பாடுகள் வழக்கமாகிக் கொண்ட மகளிர்களுக்கு இந்த ஆண்டு தித்திக்கும் பல திருப்பங்கள் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு, பதவிகள் தேடி வரும். அவர்களின் பேச்சில் வசீகரம் கூடும். கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் முன்னேற்றம் தான்.
தனுசு

நினைத்த காரியம் வெற்றி உண்டு. பல மாதங்கள் தள்ளிப் போட்ட பணிகள் இந்த மாதத்தவக்கத்திலேயே நிம்மதியாய் நலம் காணலாம். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு வரும். புதிய ஏஜென்ட், தரசு முறையிலான வியாபாரங்கள் தங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. பிறரை பகை சம்பாதிக்கின்ற அளவில் பேச்சுக்கள் இல்லாமல் விழிப்புடன் இருப்பது நல்லது. காவல் பணிகளில் நேர்மையான முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு சகல உதவிகளும் தேடி வரும். இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் கூட கிடைக்கும். உயர்கல்வியில் அரசின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியப் பணி முடித்த தனுசு ராசிக்காரர்களுக்கு பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. வயது வரம்பு எல்லையில் பணி வாய்ப்பு இழக்கும் படி உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு தேடிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
மகரம்

துணிச்சல்கள் வரும் ஆகஸ்ட் முதல் பெருகும். அந்நேரம் அஷ்டமச் சனி விலகும். கடந்த இரண்டரை ஆண்டுகள் பல்வேறு இன்னல்கள் அனுபவித்தது மறைந்து மகிழ்ச்சி கூடும். காலத்திற்கேற்றவாறு உழைக்க ஆரம்பித்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். வாரம் 35 மணிநேரம் உழைப்பேன் என்று கூறாமல், வருவாய் வருமென்றால் உழைக்கத் தயாராகிக் கொள்ளுங்கள். இனி பிஸினஸ் பார்ட்னர் மூலம் முன்னேற்றம் காணலாம். வேண்டாத குற்ற உணர்வுகள் அல்லது எதிர்மறை பேச்சுக்கள் இனி இல்லாமல், மாறாக மகிழ்ச்சி தரும் அம்சங்களாக இந்த வருடம் அமையப் போகிறது. உங்கள் வரவு செலவு கணக்குகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும் வாய்ப்பு திருப்தியாக உள்ளது. குல தெய்வ வழிபாடு மிகவும் முன்னேற்றம் தரும்.
கும்பம்

அரசு உதவிகள் கிட்டும். புது வாகனம், புதுவீடு ஆகிய பாக்யங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எதிர்பாராத உதவி தானாக கிட்டும். வம்பு பேசி மாட்டிக் கொள்ளாதிருக்க வேண்டும். சுப காரியங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பது நல்லது. பின்னர் வரும் அஷ்டமச்சனி தன்பங்குங்கு ஆட்டிப் படைக்கும். மேற்படிப்புச் செலவுகள் சற்று பதம் பார்க்கும். வெற்றி கிடைக்க வேண்டுமெனில் இரண்டு மடங்கு உழைப்பு தேவையாகலாம். இந்த ஆண்டின் பொருளாதார நிலைமை இரண்டுமுறை ஏறும் ஆனால் ஆகஸ்ட் பின்னர் ஒரிரு முறை இறக்கம் காணும். கணவர் மனைவி மற்றும் கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒருவர் மேல் மற்றவர் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும், மாறாக தேவையற்ற சந்தேகம் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆடை அணிகலன்கள் விருப்பம் தெரிவித்து அதை அடைவதில் குழப்பங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நேரம் காலம் அறிந்து தக்க சமயத்தில், அதைப் பற்றிப் பேசுவது நல்லது. பிரயாணங்களின் போது, முன்னதாக திட்டமிடுவது சிறந்த பலனைத் தரும். வடக்கு மற்றும் கிழக்கு திசை பயணம் அல்லது, வியாபாரம் சிறப்பாக இருக்கும். முன்னதாக தெற்கு மேற்கு பிரயாணங்கள் பலன் தந்திருக்க வாயப்பு உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வுககு முன்னதாகவே படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

வீட்டில் உங்கள் கூட்டணி வெற்றி பெறும். முடிந்த வரை கலகலப்பாக இருக்க பார்ப்பது நல்லது. மீன ராசிக்காரர்களின் தனிக்குணம் தன்னைச் சார்ந்தவர்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றி விடுவது தான். எனவே தான் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்களிடமும் அம்மகிழ்ச்சி காணலாம். இந்த ஆண்டு குரு பகவான் 11மிடத்தில் நீசமாகி வருட ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விரய ஸ்தானத்திற்குச் செல்வது சுமாரான யோகம் தான். சற்று மகிழ்ச்சி குறைந்தால் சுற்றுலா சென்று வந்து சரிகட்டலாம். சொத்து ஒன்று சேர்க்க வழி உண்டு. பெற்றோர்களின் ஆதரவு இந்த ஆண்டின் தனிச்சிறப்பாகும். மாணவ மாணவியர்கள் கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய கல்வி முறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டலாம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை